மெக்சிகோவில் இளம் கர்ப்பிணி பெண்ணை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கழுத்தை நெரித்து கொலை செய்து பெண் ஒருவர் குழந்தையை பறித்துச் சென்றுள்ள சம்பவம் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ நாட்டில் 20 வயதேயான ஜெசிகா கேபரிலா என்ற இளம் நிறைமாத கர்ப்பிணிக்கு சமூக வலைதளம் வாயிலாக சிந்தியா ஃபாத்திமா என்ற பெண்மணி ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது.
சம்பவத்தன்று ஜெசிகாவை தமது குடியிருப்புக்கு அழைத்த சிந்தியா பிறக்கவிருக்கும் குழந்தைக்கான உடைகள் தருவதாக கூறியுள்ளார். தோழமையாக பழகியதால் ஜெசிகாவும் சிந்தியாவை நம்பி அவரது குடியிருப்புக்கு சென்றுள்ளார்.
ஜெசிக்காவை தமது குடியிருப்புக்கு வரவழைத்த சிந்தியா அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.பின்னர் அவரது வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்துள்ளார்.
பின்னர் ஜெசிகாவின் உடலை மறைக்க முயன்றும் முடியாமல் போகவே அவர்களது குடியிருப்பில் ஒரு அறையிலேயே மறைத்து வைத்து உள்ளார்.
சிந்தியாவின் கணவர் நாட்டின் வேறு ஒரு பகுதியில் வேலை நிமித்தம் தங்கியிருந்த போது கர்ப்பமாக இருந்த சிந்தியாவுக்கு பிறந்த குழந்தை இறந்து போயுள்ளது. கணவரிடம் இதை மறைத்த சிந்தியா தமது தோழி ஜெசிகாவின் குழந்தையை பறிக்க திட்டமிட்டு அவரை கொலையும் செய்துள்ளார்.
ஜெசிகாவின் நட்புக்கு முன்னர் பலமுறை சமூக வலைதளத்தில் சிந்தியா கர்ப்பிணி பெண்களின் நட்பு கோரியுள்ளதும் பொலிஸ் விசாரணையில் வெளிவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM