கோல்ட் கோஸ்டிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்
அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நாளை ஆரம்பமாகவுள்ள 21ஆவது பொதுநலவாய (கொமன்வெல்த் போட்டிகள்) விளையாட்டுப் போட்டிகளுக்கான எலிசபெத் மகாராணியின் செய்தியை தாங்கிய கோல் உலகம் முழுக்க பயணமாகி இறுதியாக போட்டிகள் நடைபெறும் கோல்ட் கோஸ்ட் நகரை வந்தடைந்தது.
385 நாட்களாக கிட்டத்தட்ட ஒருவருடத்துக்கும் அதிகமான காலம் உலகம் முழுக்க பயணித்த மகாராணியின் செய்தி அடங்கிய பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான மகாராணியின் கோலானது தற்போது கோல்ட் கோஸ்ட் வந்தடைந்துள்ளது. வீதிகளின் இரு மருங்கிலும் மக்கள் கூடிநின்று அதனை வரவேற்க அவுஸ்திரேலிய நாட்டு வீர, வீராங்கனைகள் கோலுடன் நகர்வலம் வந்தனர்.
21 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் நாளை அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் ஆரம்பமாகவுள்ளன. 1930ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற முதலாவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின்போது பொதுநலவாய நாடுகளின் தலைவி என்ற வகையில் எலிசபெத் மகாராணி விடுத்த செய்தியைக் கொண்ட கோல் முதன்முதலாக அப்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் இக் கோல் 1998ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற பொதுநலவாய போட்டிகளின்போதே பிறநாடுகளுக்கு கொண்டு செல்லும் சம்பிரதாயம் ஆரம்பமானது.
டைட்டானியம், மரம் மற்றும் கிரானைட் உட்பட பல பொருட்களைக் கொண்டு கைகளினாலேயே வடிவமைக்கப்பட்ட தற்போதைய கோல் 1958ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து அக் கோலானது பொதுநலவாய அங்கத்துவ நாடுகள் அனைத்துக்கும் பயணம் செய்து இறுதி நாட்களில் போட்டி நடைபெறும் நகரத்துக்குக் கொண்டு வரப்படுவது வழமை.
அந்தவகையில் இம்முறை பொதுநலவாய விளையாட்டுக்களுக்கான கோலானது கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி தனது பயணத்தை ஆரம்பித்தது. ஒருவருட காலமாக நடைபெற்ற மகாராணியின் கோலை ஏந்திய பயணம் மொத்தமாக 2,30,000 கிலோமீற்றர் பயணம் செய்துள்ளது. கரிபியன் தீவுகள், ஆபிரிக்கா, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச்செல்லப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்து உலகில் நடத்தப்படும் மிக்பெரிய விளையாட்டு விழாவாகக் கருதப்படும் இந்த பொதுநலவாய விளையாட்டு விழாவில் இம்முறை 71 நாடுகளைச் சேர்ந்த 6,600 வீர, வீராங்கனைகள் பங்குபற்றுகின்றனர்.
பொதுவாக கோல்ட் கோஸ்ட் நகரில் தற்போது மழையுடன் கூடிய காலநிலையே காணப்படுகின்றது. காலை முதலே மழை ஆரம்பித்து விடுவதால் வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ளவும் சிரமப்படுகின்றனர். அதேவேளை காலநிலை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள எதிர்வுகூறலில் ஒரு வாரத்துக்கு மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்றும் போட்டிகளின் ஆரம்ப விழாவின்போதும் மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM