அதி­கா­ர­ப்போட்டி அர­சி­யலை கைவிட்டு ஒன்­றி­ணை­யுங்கள்.!

Published By: Robert

30 Mar, 2018 | 08:28 PM
image

ஈழத்­த­மி­ழர்­க­ளுக்­கான அடிப்­படை உரி­மை­களை அர­சியல் சாசன ரீதி­யாக பெறு­வ­தற்கு அதி­காரப் போட்டி அர­சி­யலை கைவிட்டு தமிழ் தலை­வர்கள் ஒன்­றி­ணைய வேண்டும் என்று அண்ணா திரா­விட முன்­னேற்­ற ­க­ழ­கத்தின் ஸ்தாபக உறுப்­பி­னரும் நிதி அமைச்சு உட்பட 1977, 1980, 1982 மற்றும் 2001ஆகிய ஆண்­டு­களில் அமைச்­சுப்­ப­த­வி­களை வகித்­த­வரும் கழ­கத்தின் செய்தி தொடர்­பா­ள­ராக பணி­யாற்­றி­ய­வரும் தற்­போ­தைய கழக அமைப்புச் செய­லா­ள­ரு­மான சி.பொன்­னையன் கேச­ரிக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வியின் போதே இவ்வாறு தெரி­வித்தார். அச் செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு; 

 கேள்வி:- அண்ணா திரா­விட முன்­னேற்­றக­ழ­கத்தின் முன்னாள் பொதுச் செய­லா­ள­ரா­கவும், முத­ல­மைச்­ச­ரா­கவும் இருந்த ஜெய­ல­லிதா ஜெயராமின் மறை­வுக்கு பின்னர் கழ­கத்தில் ஸ்திரத்­தன்­மை­யற்ற நிலைமை தோன்­றி­யுள்­ளதே?

பதில்:- அம்­மா­வுக்கு கழகம் தான் கோயில். நாங்கள் எல்லாம் அவர்­களின் பிள்­ளைகள். அம்மா தான் எங்­க­ளுக்கு எல்லாம் கடவுள். இப்­ப­டித்தான் நிலைமை இருந்­த­போது தான் கழ­கத்­தினுள் நடை­பெ­று­கின்ற விட­யங்கள் தொடர்பில் மூன்று நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்­ன­தா­கவே கவனம் எடுக்க ஆரம்­பித்து விட்டார். 

இதன்­போது போயஸ் தோட்­டத்தில் அம்­மா­வுடன் இருந்­து­கொண்டே துரோ­க­மி­ழைத்த, சதி செய்த பலரைக் கண்­ட­றிந்­த­போது அவர்­களை அவர் அங்­கி­ருந்து உட­ன­டி­யாக வெளியேற்­றவும் செய்தார். 

ஆக மூன்று நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்­னரே அம்மா இவற்­றை­யெல்லாம் அறிந்து அவர்­களை வெளியேற்­றி­யிருந்த நிலையில் தற்­போது தான் கழ­கத்தில் குழப்பம் ஏற்­பட்­டுள்­ளது போன்­ற­தொரு பிம்­பம் காண்­பிக்­கப்­ப­டு­கின்­றது. 

கேள்வி:- கழ­கத்தின் ஸ்தாபக உறுப்­பி­ன­ரா­க வும் செய்தி தொடர்­பா­ள­ரா­கவும் உள்ள நீங் கள் அவரின் மறைவு குறித்த சர்ச்­சை­களை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- என்னைப் போன்­ற­வர்கள் புரட்­சித்­த­லைவர், அம்மா போன்­ற­வர்கள் மீது அதி­க­பற்றுக் கொண்­ட­வர்­க­ளாக இருந்தோம். அம்­மா­வுக்கு சில­கா­ல­மாக உடல்­நிலை சரி­யாக இல்லை என்­பதை எம்மால் உண­ர ­மு­டிந்­தது. இருந்தபோதும் அம்­மாவின் உடல்­நி­லைக்கு என்ன ஆயிற்று? அவ­ருக்கு எத்­த­கைய சிகிச்­சைகள் நடை­பெ­று­கின்­றன போன்ற எத­னையும் அறி­ய­மு­டி­யாது போயஸ் தோட்­டமே மர்ம மாளி­கை­போன்று தான் செயற்­பட்டு வந்­தது. 

புரட்­சித்­த­லை­வ­ருக்கு உடல்­நிலை பாதிக்­கப்­பட்­ட­போது அமெ­ரிக்­கா­வுக்கு அவரை அழைத்து சென்று உயர்­த­ர­மான சிகிச்­சைகள் அளிக்­கப்­பட்­டன. அக்­கா­லத்தில் அவர் அமெ­ரிக்கா செல்­வ­தற்கும் அங்கு சிகிச்­சைகள் அளிக்­கப்­ப­டு­வ­தற்­கான நட­வ­டிக்கை­களை மேற்­கொள்­வ­தற்­கு­மான அனைத்து விட­யங்­க­ளையும் நானும் டாக்டர் காண்­டீ­ப­னுமே மேற்­கொண்­டி­ருந்தோம். அதன்­மூலம் சிகிச்­சைகள் அளிக்­கப்­பட்டு அவரை காப்­பாற்­றி­யி­ருந்தோம். 

அவ்­வா­றான நிலையில் அம்­மா­வினை அவ­தா­னித்த நான் உள்­ளிட்ட பலரும் அவ­ரு­டைய நிலை­மையை புரிந்து கொண்டு வெளிநாட்­டுக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வந்­தி­ருந்தோம். அம்மா அதனை ஏற்­றுக்­கொண்­ட­போதும் ஒரு­கட்­டத்தில் போயஸ் தோட்­டத்தில் இருந்­த­வர்கள் அதனை நிர­ாக­ரிக்கும் வகையில் செயற்­பட்­டார்கள். அதன் பின்னர் அம்­மாவே தமி­ழ­கத்தில் உள்ள அப்­பலோ வைத்­தி­ய­சா­லை­யி­லேயே நவீன வச­திகள் அனைத்தும் இருப்­பதால் அங்­கேயே சிகிச்சை பெற்­று­வி­ட­மு­டியும் என்று கூறி­விட்டார். 

இந்­தி­யா­வைப்­பொ­றுத்­த­வ­ரையில் உலகில் அதி­க­ளவு நீரி­ழிவு நோயாளர்­களை கொண்ட நாடா­க­வுள்­ளது. இருப்­பினும் உண­வுப்­ப­ழக்­க­வ­ழக்­கங்கள் அல்­லது சித்த, ஹோமி­யோ­பதி போன்ற சிகிச்­சைகள் தமி­ழ­கத்தில் அதி­க­மா­வுள்­ளன. அப்­ப­டி­யி­ருக்­கையில் நீரி­ழிவு நோய் காணப்­பட்ட அம்­மா­வுக்கு அது அதி­க­ரித்துச் செல்­வ­தற்கு ஏன் இட­ம­ளிக்­கப்­பட்­டது என்ற கேள்வி எழுந்­தது. அந்த வினா­வுக்கு போயஸ் தோட்­டத்தில் விடை கிடைக்­கவே இல்லை. 

அப்­ப­டி­யான நிலை­மையில் தான் அம்மா திடீ­ரென்று அப்­பலோ வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார். அப்­பலோ வைத்­தி­ய­சாலை அளித்த சிகிச்­சையை நான் ஒரு­போதும் குறை­கூ­ற­மாட்டேன். காரணம், அந்த வைத்­தி­ய­சா­லைக்கும் கழ­கத்­திற்கும் இடையில் நீண்ட தொடர்­புகள் உள்­ளன. புரட்­சித்­த­லைவர் அந்த வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­த­போது நானும் டாக்டர் காண்­டீ­பனும் அனைத்து விட­யங்­க­ளையும் இணைந்து கையாண்­டி­ருந்தோம். 

அவ்­வா­றான நிலையில், அப்­பலோ வைத்­தி­ய­சாலை நிரு­வா­கத்­தினர், லண்­ட­னி­லி­ருந்து டாக்டர் ரிச்சர்ட் மற்றும் டெல்லி ஏய்ம்ஸ் வைத்­தி­ய­சா­லையின் டாக்டர் ஹில்­னானி தலை­மை­யி­லான குழு­வி­ன­ரையும் வர­வ­ழைத்து சிகிச்­சைகள் அளித்­தார்கள். உல­கப்­பி­ர­சித்தி பெற்ற டாக்­டர்­களை அழைத்துவந்து சிறந்த சிகிச்­சை­களை அளிப்­ப­தற்­காக பல முயற்­சி­களை எடுத்­தி­ருந்­தார்கள். 

இந்த வைத்­தி­யர்கள் அம்­மாவின் மறைவின் பின்னர் அளித்­துள்ள அறிக்­கையில், காலம் கடந்த நிலையில் தான் சிகிச்­சைக்­காக அம்மா தமது வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். அவர் அனு­ம­திக்­கப்­பட்­ட­போது 60சத­வீதம் நிலைமை மோச­ம­டைந்­து­விட்­டது என்றும் குறிப்­பிட்­டுள்­ளார்கள்.

நீரி­ழிவு நோயா­ளி­க­ளுக்கு தோல் அரிப்பு இருக்கும். அதைப்­போக்­கு­வ­தற்கு பல வழிகள் உள்­ளன. ஆனால் அம்­மா­வுக்கு தொடர்ச்­சி­யாக ஸ்டீரொய்ட் ஊசி­ம­ருந்து வழங்­கப்­பட்டு வந்­துள்­ளது. அதி­யுச்­ச­மாக அவ­சர நிலையில் உயி­ரைப்­பா­து­காக்கும் மருந்­தா­கத்தான் அதனை பயன்­ப­டுத்த முடியும். அதனை தொடர்ச்­சி­யாக ஒரு­வ­ருக்கு வழங்க முடி­யாது.அவ்­வாறு வழங்­கினால் பக்­க­வி­ளைவுகள் ஏற்­படும். 

இந்த மருந்தின் விளைவு சாதா­ரண செவி­லி­யர்­க­ளுக்கே தெரிந்­தி­ருக்­கின்ற நிலையில் போயஸ் தோட்­டத்தில் மன்னார் குடி­யி­னரால் நிய­மிக்­கப்­பட்ட மருத்துவ குழு அதனை சிந்­திக்­காது தொடர்ச்­சி­யாக அந்த மருந்­தினை அம்­மா­வுக்கு ஏன் வழங்­கியது என்ற கேள்­வியும் உள்­ளது. இது மக்கள் மத்­தியில் பாரிய கொந்­த­ளிப்­பினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

கேள்வி:- ஜெய­ல­லிதா மருத்­து­வ ­சி­கிச்சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த சம­யத்தில் நீங்­கள்தான் கட்­சியின் செய்­த­ி தொ­டர்­பா­ள­ராக இருந்­தி­ருக்­கின்ற நிலையில் உங்­க­ளுக்கு எவ்­வாறு தக­வல்கள் வழங்­கப்­பட்­டன?

பதில்:- நான் அக்­கா­லப்­ப­கு­தியில் செய்தி தொடர்­பா­ள­ராக இருந்­தது உண்­மைதான். ஆனால் அப்­பலோ மருத்­து­வ­ம­னையில் அம்­மா­வுக்கு என்ன நடக்­கின்­றது என்­பதை எம்மால் அறிந்­து­கொள்ள முடி­ய­வில்லை. அக்­கா­லத்தில் பதில் முத­ல­மைச்­ச­ராக இருந்த ஓ.பன்­னீர்­செல்வம் மற்றும் ஏனைய மாநி­லங்­களின் முத­ல­மைச்­சர்கள் உள்­ளிட்ட எவ­ருக்­குமே அனு­மதி அளிக்­கப்­ப­ட­வில்லை.  

மருத்­து­வ­மனை நிரு­வா­கத்­திடம் நாம் அந்­தத்­த­ரு­ணத்தில் பேச்­சுக்­களை நடத்­தி­ய­போது, சசி­கலா –அம்­மாவின் பாது­கா­வலர் என்று கையொப்பம் இட்­டுள்­ளதால் அவ­ரு­டைய அனு­ம­தி­யின்றி நாம் யாரையும் அனு­ம­திக்க முடி­யாது என்று பதி­ல­ளித்து விட்­டார்கள். இதனால் எம்மால் ஒன்றும் செய்­ய­மு­டி­ய­வில்லை.அவர்கள் சில சம­யங்­களில் சொல்­கின்ற விட­யங்­களை மட்­டுமே நான் ஊடகங்­க­ளுக்கு கூறுவேன். ஏனைய கட்­சி­யி­ன­ருக்கு கூறுவேன். அவ்­வ­ளவு தான். 

கேள்வி:- மூன்று நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்­னரே சசி­கலா உள்­ளி­ட்ட­வர்கள் குறித்து ஜெய­ல­லிதா அறிந்­தி­ருந்து அவர்­களை வெளியேற்­றி­யி­ருந்த நிலையில் அவரால் மீண்டும் போயஸ் தோட்­டத்­திற்கு திரும்பி அனைத்­தையும் கட்­டுப்­ப­டுத்தும் அதி­கா­ரத்­தினை எவ்­வாறு பெற­மு­டிந்­தது?

பதில்:- மன்­னார்­குடி குடும்பம் போயஸ் தோட்­டத்­தி­லி­ருந்து வெளியேற்­றப்­பட்ட பின்னர் சசி­கலா, அம்­மா­வுக்கு ஒரு கடிதம் எழு­தினார். அந்­தக்­க­டி­தத்­தினை நான் உள்­ளிட்ட மூத்த முக்­கி­யஸ்­தர்கள் முன்­னி­லையில் அம்மா படித்­துக்­காட்­டினார். அதில், என்­னு­டைய குடும்­பத்­தினைச் சார்ந்­த­வர்கள் இவ்­வாறு உங்­க­ளுக்கு துரோகம் செய்­வார்கள் என்று நான் அறிந்­தி­ருக்­க­வில்லை. 

அதனால் வருத்­த­ம­டை­கின்றேன். நான் உங்­க­ளுக்­கா­கவே இருப்­பவள். உங்­க­ளுக்கு பணி­யா­ள­ராக இருக்க விரும்­பு­கின்றேன். அர­சி­யலில் ஈடு­ப­ட­வி­ரும்­ப­வில்லை. என்னை அனு­ம­தி­யுங்கள் என்று கோரி­யி­ருந்தார். அதன் பின்னர் அம்­மாவின் காலில் விழுந்து சசி­கலா அழுதார். அதனை நம்­பிய அம்மா அவரை போயஸ் தோட்­டத்­திற்குள் அனு­ம­தித்தார். ஆனால் கட்சி விட­யங்­களில் எந்த அதி­கா­ரத்­தி­னையும் வழங்­கி­யி­ருக்­க­வில்லை. சசி­க­லாவின் நாட­கத்­தினை நாம் யாருமே உணர முடி­யாது போய்­விட்­டது. 

கேள்வி:- அம்­மாவின் மறைவின் பின்னர் கழ­கத்­திற்குள் ஏற்­பட்ட குழப்ப சூழ­லின்­போது சசி­க­லாவின் ஆத­ர­வா­ள­ராக செயற்­பட்ட நீங்கள் மனம் மாறி­யது ஏன்?

பதில்:- சசி­க­லா­வினைப் பொறுத்­த­வ­ரையில் அவர் அறி­வாளி. சிந்­தித்து, நிதா­ன­மாக பேசுவார். அதில் அவரை குறை­சொல்ல முடி­யாது. ஆனால் அவர் அனைத்­தையும் தனது சொந்த நலத்­துக்­காக அதா­வது, கட்­சியை, சொத்­துக்­களை கைய­கப்­ப­டுத்­து­வ­தற்­காக அம்­மாவின் மீது அக்­க­றைப்­ப­டாது இருந்து வேறு­வி­த­மாக அனைத்­தையும் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார் என்­பதை நாம் எப்­போது ஆதா­ரத்­துடன் அறிந்­தோமோ அந்த தரு­ணத்தில் அவ­ருக்கு எதிர்ப்­பினை வெளியிட்டோம்.  அந்த உண்­மை­களை கண்­ட­றிந்த பின்னர் என்­போன்­ற­வர்கள் தற்­போ­தைய முத­ல­மைச்சர் தலை­மை­யி­லான கழ­கத்தில் மீண்டும் இணைந்து கொண்டோம். 

கேள்வி:- தற்­போது வினைத்­திறன் மிக்க ஒரு தலை­மையை கழகம் கொண்­டி­ருக்­க­வில்லை என்று கடு­மை­யான விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­ற­னவே?

பதில்:- அண்ணா திரா­விட முன்­னேற்­றக்­க­ழ­கத்தில் வினைத்­திறன் மிக்க தலை­வர்கள் இல்லை என்று கூறி­வி­ட­மு­டி­யாது. காரணம், தற்­போ­தைய முத­ல­மைச்சர் எடப்­பாடி பழ­னிச்­சாமி மிகச்­சி­றந்த நிரு­வா­கி­யாக செயற்­பட்டு வரு­கின்றார். 

அதே­போன்று ஏற்­க­னவே மூன்று தட­வைகள் முத­ல­மைச்சர் பத­வியை வகித்த துணை­மு­த­ல­மைச்சர் ஓ.பன்­னீர்­செல்­வத்­தி­டமும் திற­மைகள் காணப்­ப­டு­கின்­றன. ஜல்­லிக்­கட்டு, ஆந்­திர நீர்­வ­ழங்கல் திட்டம், அனர்த்தம் ஏற்­பட்­ட­போது நிவா­ர­ணப்­ப­ணிகள் முன்­னெ­டுப்பு என பல்­வேறு விட­யங்­களில் அவர் திறம்­படச் செயற்­பட்­டி­ருக்­கின்றார். 

மேலும் முத­ல­மைச்சர் எடப்­பாடி பழ­னிச்­சாமி கூட நல்­ல­ சிந்­த­னை­யா­ள­ராக செயற்­ப­டு­கின்றார். துணை­மு­த­ல­மைச்­ச­ருடன் இணைந்து பல்­வேறு துரித நட­வ­டிக்­கை­களை எடுத்­துக்­கொண்டு வரு­கின்றார். இருப்­பினும் ஊட­கங்கள் அவை தொடர்பில் செய்­கின்ற பிர­சாரம் பின்­ன­டை­வு­க­ளுக்கு கார­ண­மா­கின்­றன. 

எனினும் தற்­போது ஊட­கங்கள் தொடர்பில் சமூக ஊட­கங்கள் ஊடாக எழுந்­துள்ள விமர்­ச­னத்தால் அவை தம்மை சுய­ப­ரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்தி செயற்­பட ஆரம்­பித்­தி­ரு­கின்­ற­மையை அவ­தா­னிக்க முடி­கின்­றது. தற்­போது அம்­மாவின் மக்கள் நலத் திட்­டங்­களை நாம் இலத்­தி­ர­னியல் புகை­யி­ரத வேகத்தில் முன்­னெ­டுக்க ஆரம்­பித்­துள்ளோம். 

கேள்வி:- ஈழத்­த­மி­ழர்கள் விடயம் சம்­பந்­த­மாக முதன்­மு­த­லாக எம்.ஜி.ஆரின் பணிப்பில் அப்­போ­தைய பிர­தமர் இந்­தி­ரா­காந்­தியை சந்­தித்­தவர் என்ற வகையில் அந்த அனு­ப­வத்­தினை பகிர்ந்து கொள்­ளுங்கள்?

பதில்:- ஆம், புரட்­சித்­த­லை­வரின் பணிப்பில் என்­னு­டைய தலை­மை­யி­லான குழு­வினர் ஐந்து தட­வைகள் அப்­போ­தைய பிர­தமர் இந்­தி­ரா­ காந்­தியை சந்­தித்­தி­ருந்தோம்.  ஈழத்­திலே நிலை­மைகள் மோச­ம­டைகின்­றன என்ற விடயம் தொடர்ச்­சி­யாக புரட்­சித்­த­லை­வ­ருக்கு கிடைத்­தது. குறிப்­பாக ஈழத்­தமிழ் பெண்கள் வன்புணர்வுகள், இன­ரீ­தி­யான அடக்­கு­மு­றைகள் நிகழ்­கின்­றன என்­றெல்லாம் கூறப்­பட்­டது. 

இத­னை­ய­டுத்து புரட்­சித்­த­லைவர் ஈழம் சம்­பந்­த­மாக கொள்­கை­ரீ­தி­யான முடி­வொன்றை எடுக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்­டிற்கு வந்தார். இதனால் ஈழத்­திற்கு தனது புல­னாய்­வா­ளர்­களை அனுப்­பினார். கள­நி­லை­மை­களை நேரில் ஆராய்ந்தார்.  அதன் பிர­காரம், சிங்­கள பேரி­ன­வா­தத்­தினர் கடும்­போக்­காக செயற்­ப­டு­கின்­றார்கள் என்­பது புலப்­பட்­டது.

குறிப்­பாக இந்­துக்கள் வாழ்ந்த பாகிஸ்தானில் பிற்­கா­லத்தில் இஸ்­லா­மி­யர்கள் அல்­லா­த­வர்கள் வாழ முடி­யாது என்ற நிலைமை ஏற்­பட்­டது. அது­போன்று சிங்­கள பௌத்­தர்கள் அல்­லா­த­வர்­களை அடக்கி ஒடுக்கி நாட்­டி­லி­ருந்து வெளியேற்­றி­விட வேண்டும், இலங்கை ஒரு சிங்­கள பௌத்த நாடு என்­பதை உறுதி செய்­ய­வேண்டும்,அத்­துடன் அர­சாங்­கத்­திலும் பௌத்த தேரர்­களின் ஆதிக்கம் இருந்­தது போன்ற கொடு­மை­யான செயற்­பா­டுகள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்­தன என்­பது தெளிவாக்­கப்­பட்­டது. 

மண்ணின் மைந்­தர்­க­ளான தமி­ழர்­களை விஜ­யனின் வரு­கை­யுடன் தோற்­றம்­பெற்ற ஒரு இனம் அந்த மண்ணை விட்டே அகற்ற முயல்­வதை கண்டு புரட்­சித்­த­லைவர் உணர்ச்­சி­வ­சப்­பட்டார். அந்த மக்­க­ளுக்­காக குரல்­கொ­டுக்க தயா­ரானார். பிர­தமர் இந்­திரா காந்­திக்கு நிலை­மை­களை விளக்­கு­வ­தற்­காக எம்மை அனுப்பி வைத்தார்.  ஐந்து தட­வைகள் நாங்கள் சந்­திப்­புக்­களை நடத்­தினோம். ஈழத்தில் நடை­பெறும் நிகழ்­வு­க­ளுக்­கான சான்­றுகள் பல­வற்றை வழங்­கினோம். அத­னைத்­தொ­டர்ந்து புரட்­சித்­த­லை­வரின் கருத்­துக்­களை பிர­தமர் இந்­தி­ரா­ காந்­தியும் ஏற்­றுக்­கொண்டு செயற்­பட்டார். 

அதன் பின்னர் அவரும் தனது புல­னாய்­வா­ளர்­களை அங்கு அனுப்பி நிலை­களை தெரிந்­து­கொண்ட பின்னர்தான் தமி­ழ­கத்தின் காட்­டுப்­ப­கு­தியில் 13இடங்­களில் பயிற்சி முகாம்­களை அமைத்து இர­க­சி­ய­மான ஆயு­தப்­ப­யிற்­சிகள் அளிக்­கப்­பட்­ட­தோடு ஏ.கே.47.துப்­பாக்­கி­களும் வழங்­கப்­பட்­டன. இந்­தி­ரா­காந்தி அம்­மை­யாரின் துணை­யுடன் புரட்­சித்­த­லைவர் ஈழத்­த­மி­ழர்­க­ளுக்­காக செய்த மாபெரும் புரட்­சியே இது­வாகும். 

கேள்வி:- அக்­கா­லத்தில் ஈழத்தில் உரு­வான ஆயுத ரீதி­யாக பல்­வேறு போராட்ட அமைப்­புக்கள் தொடர்பில் எம்.ஜி.ஆர். எவ்­வா­றான நிலைப்­பாட்­டினைக் கொண்­டி­ருந்தார்?

பதில்:- அப்­போ­தி­ருந்த விடு­த­லைப்­பு­லிகள், புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., அமிர்­த­லிங்­கத்தின் புதல்­வ­ரு­டைய அமைப்­பான டெலா உள்­ளிட்ட அனைத்து அமைப்­புக்­களும் தமி­ழ­கத்தில் சுதந்­தி­ர­மாக நட­மா­டு­வ­தற்கு இட­ம­ளித்­தி­ருந்தார். அனை­வ­ரு­டனும் நல்­லு­றவைப் பேணினார். 

இச்­ச­ம­யத்தில் தான் பாண்­டி­ ப­ஜாரில் ஒரு நாள் புளொட் அமைப்பின் தலைவர் முகுந்­த­னுக்கும்(உமா­ ம­கேஸ்­வரன்) தம்­பிக்கும்(பிர­பா­கரன்) இடையில் துப்­பாக்கி பிர­யோகம் இடம்­பெற்­றது. இதன்­போது தம்பி உள்­ளிட்­ட­வர்கள் கைது செய்­யப்­பட்டனர். உட­ன­டி­யாக புரட்­சித்­த­லைவர் என்னைத் தொடர்பு கொண்டார். நான் அப்­ போது சிறை உள்­ளிட்ட விவ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்பான அமைச்­ச­ராக இருந்தேன். 

உட­ன­டி­யாக தம்பி உள்­ளிட்­ட­வர்­களை விடு­தலை செய்ய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பணித்தார். அதற்கு அமை­வாக தம்பி உள்­ளிட்­ட­வர்­க­ளுக்கு விடு­தலை அளிப்­ப­தற்கு நட­வ­டிக்­கை­களை எடுத்து சிறை­யி­லி­ருந்து நேர­டி­யாக புரட்­சித்­த­லை­வ­ரி­டத்தில் அழைத்துச் சென்றேன். அத்­துடன் புரட்­சித்­த­லைவர் அனைத்து அமைப்­புக்­க­ளையும் அழைத்தார். அச்­ச­ம­யத்தில் புரட்­சித் ­த­லைவர் கூறிய வசனம் கூட எனக்கு இன்றும் நினைவில் இருக்­கின்­றது. 

விடு­த­லைக்­காக கருத்­து­வே­று­பாட்­டுடன் ஐந்­தாறு மாடு­க­ளாக மேய்ந்து கொண்­டி­ருக்­கின்­றீர்கள். உங்­களை தாக்க வேண்டும் என்று வெறி­பி­டித்த சிங்­களம் என்ற சிங்கம் பார்த்­துக்­கொண்­டுள்­ளது. நீங்கள் ஒன்­றாக இணைந்து சிங்கம் வரும்­போது பத்து கொம்பால் தாக்­கினால் அதனை கொன்­று­விட முடியும். தனித்­த­னி­யாகச் சென்றால் நீங்கள் ஏமாந்து விடு­வீர்கள். ஆகவே ஒற்­று­மை­யாக இருங்கள். நான் உத­வு­கின்றேன் என்றார். 

அதன்­பி­ர­காரம் பார­பட்­ச­மின்றி ஆயுதம் உள்­ளிட்ட அனைத்து உத­வி­க­ளையும் வழங்­கினார். தி.மு.க.வின் பின்­ன­ணி­யுடன் புரட்­சித்­த­லை­வ­ரையே விமர்­சித்த ரெலோவின் தலைவர் சிறி­ச­பா­ரட்ணம் உள்­ளிட்­ட­வர்­க­ளுக்கு கூட உத­வி­களை வழங்­கு­வதில் புரட்­சித்­த­லைவர் வேறு­பாட்­டினைக் காட்­டி­யி­ருக்­க­வில்லை. 

கேள்வி:- எம்.ஜி.ஆர்., ஜெய­ல­லிதா ஆகிய தலை­மை­க­ளி­டத்தில் மாறு­பட்ட நிலைப்­பா­டுகள் காணப்­பட்­டது ஏன்?

பதில்:- முழு­மை­யாக அப்­ப­டிக்­கூ­றி­வி­ட­மு­டி­யாது. புரட்­சித்­த­லைவர் இருந்­த­போது அவ­ரு­டைய பணிப்பில் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்­கான நிதி அம்­மாவின் கையால் தான் போயஸ் தோட்­டத்தில் வைத்து வழங்­கப்­பட்­டது. நானும் அச்­ச­ம­யத்தில் அங்கு இருந்தேன். விடு­த­லைப்­பு­லிகள் சார்பில் தம்பி(பிரபாகரன்), அன்ரன் பாலசிங்கம், பேபி சுப்பிரமணியம் ஆகியோர் வந்திருந்தார்கள். அச்சமயத்தில் அம்மா, இந்தியாவில் வடக்கு எங்களை அடக்கியாளுகிறது. ஹிந்திமொழி திணிப்பு நடைபெறுகின்றது. 

இந்தியாவில் தமிழர்களின் கொடியை டெல்லியில் பறக்க விடமுடியாது. தமிழர்களின் கொடியை நாட்டுவதென்றால் தனி நாடு தேவை. அந்த தனித் தமிழ் நாட்டினை அமைக்க கூடியவர் நீங்கள் தான். தனி ஈழத்தின் கொடி ஐ.நா.சபையில் இருக்கவேண்டும். அதற்கான அச்சாணியாக இந்த நான்கு கோடி ரூபா நிதியை புரட்சித்தலைவர் முற்பணமாக வழங்குகின்றார் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறிக் கையளித்திருந்தார். 

இருப்பினும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்தின் பின்னர் புலிகள் அமைப்பு தொடர்பில் அம்மா 

வருத்தமடைந்திருந்தார். இருப்பி னும் உண்மை நிலைமைகள் எடுத்து ரைக்கப்பட்ட பின்னர் நான் விரும்பும் ஆட்சி டெல்லியில் அமைந்தால் தனி ஈழத்தினை அமைத்து தருவேன் என்று தமிழக சட்ட மன்றத்திலேயே தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார். 

கேள்வி:- மூத்த அரசியல்வாதியான நீங்கள் தற்போதைய சூழலில் ஈழத்தமிழ் அரசியல் தலைவர்களுக்கு கூறும் அறிவுரை என்ன?

பதில்:- விடுதலைக்காக போராடிய போராளிகள் பலர் உலகளவில் இருக்கின் றார்கள். இருப்பினும் ஈழத்தில் தமிழர் 

கள் அந்த பூர்வீக மண்ணின் மைந்தர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டு அவர்களுக் கான அடிப்படை உரிமைகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். சிங்கள, பேரினவாதத்தினை வடக்கு ,கிழக்கில் பரப்ப முயலும் ஆட்சியாளர்களுக்கு பதிலடி வழங்கும் வகையில் அங்குள்ள தமிழ் மக்களின் தலைவர்கள் வேற்றுமை களை மறந்து, அதிகாரத்துக்கான மோதல் நிலை அரசியலைக் கைவிட்டு ஒன்றிணைய வேண்டும். தமிழர்களுக்கு அரசியல் சாசன ரீதியான உரிமைகளை பெற்றுத்தர வேண்டும். அதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபடவேண்டும். புரட்சித்தலைவர், அம்மா வழியிலேயே தற்போதைய முதலமைச்சர் உள்ளிட் ஒட்டுமொத்த கழகமே ஈழத்தமிழருக்கான உதவிகளை என்றுமே பின்னிற்காது வழங்கும். 

( ஆர்.ராம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிட்டு மீதான கொலை முயற்சி

2025-01-21 14:07:54
news-image

காசா பள்ளத்தாக்கு போர்நிறுத்தம் நின்றுபிடிக்குமா?

2025-01-21 14:08:15
news-image

"தையிட்டி விகாரையை தென்பகுதி சிங்கள மக்கள்...

2025-01-21 13:08:03
news-image

அதிகாரம் படைத்தவர்களுடன் எந்தவிதமான சமரசத்திலும் ஈடுபடாமல்...

2025-01-21 08:45:36
news-image

எதிர்கால சந்ததியினர் மத்தியில் அச்சுறுத்தலாக மாறும்...

2025-01-19 16:20:27
news-image

கிறிப்டோ கரன்சி என்றால் என்ன? இலங்கையில்...

2025-01-19 16:10:32
news-image

பனிப்பாறைகளின் இறையாண்மை

2025-01-19 15:56:51
news-image

சமஷ்டிக் கோரிக்கை தமிழரசுக்கட்சியின் அஸ்தமித்துப்போன கனவா?...

2025-01-19 15:45:57
news-image

உயிர்களை பறிக்கும் வீதி விபத்துக்கள்

2025-01-19 15:33:13
news-image

தேவைப்படுவது தமிழ் மைய அரசியலே

2025-01-19 15:18:20
news-image

சேமிப்பாளர்களுக்கு நன்மையளிக்கக்கூடிய விதத்தில் புதிய நிதியியல்...

2025-01-19 15:13:50
news-image

அரசியல் கட்சிகளின் நிலைபேற்றை விடவும் சமூகத்தின்...

2025-01-19 15:06:36