லண்டனில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த சிறுவர்கள் படையை அமைக்க முயற்சி செய்த இங்கிலாந்து இளைஞருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனை சேர்ந்த 25 வயதான உமர் அகமது ஹக் என்பவர் முறையாகப் பயிற்சி பெறாமலேயே மதப்பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
குறித்த இளைஞர் மதப்பள்ளிக்கூடத்தில் மதக் கல்வியை போதிக்காமல் சிறுவர்களுக்கு பயங்கரவாத தாக்குதல்கள் பற்றிய வீடியோ படம் காட்டி அவர்களை பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு மூளைச் சலவை செய்து உள்ளார்.
அது மட்டுமல்லாது லண்டனில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு அவர்களைக் கொண்டு ஒரு படையை அமைக்கவும் அவர் முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணை நடாத்தியதில் பயங்கரவாத செயற்பாடுகளோடு தொடர்புடைய அவரது இரு நண்பர்களும் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் மீதும் பொலிஸாரால் வழக்கு தொடரப்பட்டது.
நீதி மன்ற வழக்கு விசாரணையின்போது அவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பிரதான சந்தேக நபரான ஆசிரியருக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், அவருடைய நண்பர்களில் ஒருவருக்கு 13 ஆண்டுகளும், மற்ற நண்பருக்கு 4 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM