(எம்.சி.நஜிமுதீன்)
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதமருக்கு எதிராக பாராளுமன்றில் வாக்களித்துவிட்டு உள்ளூராட்சிமன்றங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்க முடியாது. ஆகவே பிரதமருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கும் அதேவேளை உள்ளூராட்சிமன்றங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஆட்சிமைக்க முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் நான்காம் திகதி பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றை தினமே அதன்மீதான வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது.
ரணில் விக்ரமசிங்க மீது மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர். அதன் வெளிப்பாட்டை கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் போது காண்பித்துள்ளனர். மேலும் பிரதமருக்கு எதிரான நம்பிக்ககையில்லாப் பிரேரணையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே கொண்டு வந்திருக்க வேண்டும். ஏனெனில் ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவி வகிக்கும் அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிக்க முடியாதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களே அடிக்கடி தெரிவித்துள்ளனர். சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அடிக்கடி அக்கருத்தை தெரிவித்து வந்தனர்.
எனினும் அவ்வாறு அந்த உறுப்பினர்கள் தெரிவித்த கருத்தை தற்போது நடைமுறைப்படுத்தும் காலம் வந்துள்ளது. எனவே அதனை உறுதிப்படுத்துவதற்கு அவர்கள் தயாரான நிலையில் உள்ளார்களா என்ற சந்தேகம் உள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 44 பேரும் பொதுவான தீர்வு ஒன்றுக்கு வர வேண்டும். அப்போதுதான் நடைமுறைச்சாத்தியமான முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM