கோவிலுக்கு சென்றோரிடம் கொள்ளை : பொலிஸ் அதிகாரி பலி!!!

Published By: Digital Desk 7

24 Mar, 2018 | 03:47 PM
image

மட்டக்களப்பு – மைலம்பாவெளி ஆலய வழிப்பாட்டிற்கு நேற்று காரில் சென்று வரும் போது கொள்ளையர் குழு ஒன்று கொள்ளையடிக்க முற்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் குருநாகல் - அலாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் எம்.ஹேரத் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருகையில்,

உயிரிழந்த குறித்த பொலிஸ் அpதகாரி சாவக்கச்சேரியிலுள்ள அவரது குடும்ப நண்பர்களுடன் மட்டக்களப்பிற்கு ஆலயங்களை வழிப்பாடு செய்ய நேற்று முன் தினம் கார் ஒன்றில் புறப்பட்டுச் சென்று மட்டக்களப்பிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

நேற்று மாலை 5.30 மணியளவில் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள மைலம்பாவெளி ஆலயத்திற்கு சென்று வழிப்பாடுகளை முடித்து விட்டு ஆலயத்திற்கு முன்னாள் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த காரில் ஏறு முற்பட்ட போது கொள்ளையர் குழு ஒன்று கூரிய ஆயுதங்களை காட்டி அவர்களிடமிருந்து பணம் நகைகளை கொள்ளையிட முயற்சித்த போது மோதல் ஏற்பட்டுள்ளது.

இம் மோதலில் பொது மக்களும் இணைந்து கொள்ளையர்கள் மூவரை மடக்கிப் பிடித்ததோடு கொள்ளையர்களின் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் அதிகாரியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த பொலிஸ் அதிகாரியை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட கொள்ளையர்கள் மூவரும் ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மடக்கி பிடிக்கப்பட்ட கொள்ளையர்கள் ஏறாவூர் தன்னாமுனையைச் சேர்ந்தவர்கள் எனவும் கொள்ளைக்கு பயன் படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கூரிய ஆயதங்களை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொட்ரபான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் உடல் பிரேத பிரசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என மட்டக்களப்பு வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறை...

2025-02-18 19:12:32
news-image

எமது மீனவர்களை பயன்படுத்தி இந்தியாவை சீனா...

2025-02-18 17:26:51
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-18 18:33:18
news-image

மனைவியை தாக்கிய மருமகன்; தடுத்த மாமனாரை...

2025-02-18 18:34:47
news-image

கார் - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-18 18:14:41
news-image

மார்ச் 31 இன் பின் தேர்தலை...

2025-02-18 17:29:33
news-image

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை மாதக் குழந்தை...

2025-02-18 18:37:48
news-image

தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின்...

2025-02-18 17:58:45
news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54