சிகிச்சைக்காக வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வைத்தியருக்கு சிறை மற்றும் பிரம்படி!!!

Published By: Digital Desk 7

23 Mar, 2018 | 12:47 PM
image

சிங்கபூரில் இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இந்திய வைத்தியருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த லூக்கா மணிமாறன் தேகராஜா சிங்கப்பூரில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில்  பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்த போது  இளம்பெண் ஒருவர்  தனக்கு முதுகு மற்றும்  இடுப்பில்  வலி இருப்பதாக கூறி மணிமாறனிடம் சிகிச்சைக்காக வந்துள்ளார்.

தன்னிடம் சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் சிகிச்சை அளிப்பதாக கூறி அவரது ஆடையை அவிழ்க்க சொல்லி பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

தன்னிடம் வைத்தியர் தவறாக நடந்து கொண்டார் என கூறி குறித்த இளம் பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் இந்திய வைத்தியர் மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

விசாரணையின்போது வைத்தியர் மீதான  பாலியல் தொல்லை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 11 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு 3 பிரம்படி தருமாறும் நீதிபதி உத்தரவிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47