அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள கொமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கவிருந்த எமது பெயர்களை ஒலிம்பிக் சங்கம் நீக்கிவிட்டதாக ஜிம்னாஸ்டிக் வீரர்கள் இருவர் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
கொமன்வெல்த் போட்டிகளுக்கு இலங்கையிலிருந்து பங்கேற்கவிருந்த ஆண்கள் பிரிவு ஜிம்னாஸ்டிக் அணிக்கு தற்போது வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் குறித்த நேரத்தில் அனுமதிப் பத்திரங்களை சமர்ப்பிக்காமையே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பொது நூலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட குறித்த வீரர்கள் இருவர் தாம் முதல் கட்ட அணியில் தெரிவு செய்யப்பட்டிருந்ததாகவும் தற்போது இறுதி அணியில் தமது பெயர்களை நீக்கியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.
ஆனாலும் கொமன்வெல்த் போட்டிகளின்போது தாம் பயிற்சிகளை மேற்கொள்ள தமக்கு கொமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் நேரம் ஒதுக்கியிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தாம் நேரம் தாழ்த்தி அனுமதிப்பத்திரங்கள் வழங்கியிருந்தால் தமக்கு எப்படி நேரம் ஒதுக்குவார்கள் என்றும் அவ் வீரர்கள் கேள்வி எழுப்பினர்.
இதில் டில்ஷான் கவின் என்ற வீரரின் பயிற்சியாளரும் தந்தையுமான வருண பிரசாத் ஒலிம்பிக் சங்கத் தேர்தலின்போது எதிரணிக்கு ஆதரவாக செயற்பட்டமையே இவ் வீரர்களின் நீக்கத்திற்கு காரணம் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஹன்ஸ கயசான் என்ற மற்றைய வீரர் கூறும்போது, மிகுந்த பொருளாதார சிரமத்திற்கு மத்தியில் நான் பயிற்சிகளை மேற்கொண்டு தேர்வு பெற்றேன். தற்போது என் வாய்ப்பை மறுக்கின்றனர்.
பிச்சையெடுத்தாவது என்னை போட்டியில் பங்குபற்றத் தேவையான பணத்தைப் பெற்றுத்தருவதாக எனது தந்தை அமைச்சருடனான சந்திப்பின்போது கூறினார் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM