ஒரு கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது 

Published By: Priyatharshan

21 Mar, 2018 | 09:21 PM
image

(இரோஷா வேலு)

முச்சக்கர வண்டியொன்றில் கஞ்சா போதைப்பொருளை விற்பனைக்காக எடுத்துச் சென்ற முகவர்கள் இருவர் இன்று நுரைச்சோலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிலந்த பண்டார தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்தல பிரதேசத்தில் வைத்து முச்சக்கர வண்டியொன்றில் கஞ்சா போதைப்பொருளை விற்பனைக்காக எடுத்துச் சென்ற முகவர்கள் இருவர் இன்று காலை நுரைச்சோலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இச்சம்பவத்தின் போது கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 38 மற்றும் 28 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இவர்களை கைதுசெய்யும் வேளையில் இவர்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் இன்று கற்பிட்டி நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தினர். இதன்போது நீதிவான் அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். 

எனவே குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27