தோட்டத்தொழி­லா­ளர்­க­ளுக்கு 3500 ரூபா கொடுப்­ப­ன­வுக்கு அமைச்­ச­ரவை அனு­மதி

19 Nov, 2015 | 02:09 PM
image

பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு 3500 ரூபா கொடுப்­ப­னவு வழங்­கு­வது தொடர்பில் முன்­வைக்­கப்­பட்ட அமைச்­ச­ரவை பத்­தி­ரத்­திற்கு அமைச்­ச­ரவை அனு­மதி கிடைத்­துள்­ளது.

digambaram

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற அமைச்­ச­ரவை கூட்­டத்­தின்­போதே இந்த அனு­மதி கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தாக அமைச்சர் பழனி திகாம்­பரம் தெரி­வித்தார்.

கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டு­வதில் தாமதம் ஏற்­பட்­டுள்­ளதால் தொழி­லா­ளர்­களின் நன்மை கருதி தீபா­வ­ளிக்கு முன்னர் இந்த 3500 ரூபா கொடுப்­ப­னவை வழங்கும் முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது.

எனினும் தோட்டக் கம்­ப­னி­களின் நிலைப்­பாட்­டிற்கு அமைய தேயிலை சபை ஊடாக இந்த கொடுப்­ப­னவை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்­சினால் அமைச்­ச­ரவை பத்­திரம் ஒன்று அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

இந்த அமைச்­ச­ரவை பத்­தி­ரத்­தின்­படி பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 3500 ரூபா கொடுப்­ப­னவு வழங்க சுமார் 685 மில்­லியன் ரூபா தேவை என கணிப்­பி­டப்­பட்­டது. அதன்­படி அமைச்­சர்­க­ளான பழனி திகாம்­பரம், மனோ கணேசன் மற்றும் இரா­ஜாங்க அமைச்சர் வீ.ராதா­கி­ருஸ்ணன் உள்­ளிட்ட குழு­வினர் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை சந்­தித்து குறித்த பணத்தை திறை­சேரி ஊடாக பெற்றுத் தரு­மாறு கோரிக்கை விடுத்­தனர்.

இந்த கோரிக்­கையை பிர­தமர் ஏற்­றுக்­கொண்டு திறை­சே­ரியில் இருந்து பணத்தை வழங்க இணக்கம் தெரி­வித்தார். எனினும் திறை­சே­ரியில் இருந்து இலங்கை தேயிலை சபை­யூ­டாக இந்த பணத்தை கைமாற்ற பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்சர் நவீன் திஸா­நா­யக்க மேல­திக அமைச்­ச­ரவை பத்­திரம் ஒன்றை தாக்கல் செய்­ததன் பேரில் நேற்று அதற்­கான அனு­மதி கிடைக்­கப்­பெற்­றது.

பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு திறை­சே­ரியில் இருந்து 3500 ரூபா கொடுப்­ப­னவு வழங்க அனு­மதி கிடைக்­கப்­பெற்­றுள்ள முதல் சந்­தர்ப்பம் இது­வென்­பது முக்­கிய அம்­ச­மாகும் என அமைச்சர் திகாம்­பரம் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை கிடைக்­கப்­பெற்ற அமைச்­ச­ரவை அனு­ம­தியின் பின்னர் இலங்கை தேயிலை சபையின் தலை­வ­ருக்கு தொலை­பேசி மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர் பழனி திகாம்­பரம் தொழி­லா­ளர்­க­ளுக்கு 3500 ரூபா கொடுப்­ப­னவை விரைவில் வழங்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பணித்தார்.

அதன்­படி, பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் இலங்கை தேயிலை சபை இடையே உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டதன் பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 3500 ரூபா கொடுப்பனவு விரைவில் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11 ஆவது புதிய...

2025-06-17 18:27:52
news-image

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார்...

2025-06-17 18:14:57
news-image

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; அகழ்வாய்வுகள் முழுமையாக...

2025-06-17 18:06:42
news-image

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் சந்தமாலி...

2025-06-17 17:48:07
news-image

ஆறு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை...

2025-06-17 17:10:33
news-image

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை...

2025-06-17 16:48:00
news-image

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின்...

2025-06-17 17:03:39
news-image

காணி மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள்...

2025-06-17 17:02:57
news-image

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது -...

2025-06-17 16:44:12
news-image

மொரட்டுவை பகுதியில் கடலுக்குச் சென்று மாயமான...

2025-06-17 16:32:10
news-image

மனைவியை சுட்டுக் கொலை செய்த கணவன்...

2025-06-17 16:21:16
news-image

புழுக்கள், பூச்சிகள் அடங்கிய காளான் பொதிகளை...

2025-06-17 15:23:40