இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கொரியா 785.07 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக கொரிய எக்ஸிம் வங்கியின் இலங்கைக்கான பிரதம வதவிட பிரதிநிதி சங்சூ ஜங் தெரிவித்துள்ளார்.
கொரியாவினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட உள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுப்படுத்திய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொரிய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வின் அடிப்படையில் ஏற்கனவே கொரிய அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இலங்கையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கொரியாவின் எக்ஸிம் வங்கியானது இலங்கையில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென 785.07 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை ஒதுக்கியுள்ளது.
இந்நிதியில் 385 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் போக்குவரத்து துறைசார் அபிவிருத்தி நடவடிக்கைகளும், 205 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நீர் வழங்கல் மற்றும் கழிவு முகாமைத்துவ அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
கொரிய நிதி மற்றும் மூலோபாய அமைச்சின் கீழ் இயங்கும் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தின் ஊடாக அபிவிருத்தி நடவடிக்ககைள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு தேவையான கடன்களை வழங்குதல் மற்றும் இலங்கையின் சர்வதேச வர்த்தக, முதலீட்டு நடவடிக்கைகளுக்கான நிதி ரீதியான வழங்குனராக தொழிற்படல் ஆகிய இரு பிரதான தொழிற்பாட்டு நடவடிக்கைகளை கொரிய எக்ஸிம் வங்கி மேற்கொள்ளவுள்ளது.
கொரிய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையிலான மூலோபாய புரிந்துணர்வு கட்டமைப்பு மூலம் இனங்காணப்பட்ட துறைகளான கல்வி, போக்குவரத்து, நீர் வழங்கல் முகாமைத்துவம், கழிவு முகாமைத்துவம் மற்றும் பின்தங்கிய பிரதேசங்களின் அபிவிருத்தி என்பன தொடர்பில் பிரதான கவனம் செலுத்தப்படவுள்ளது. மேற்குறித்த ஒழுங்கின்படி கொரிய நிதி மூலம் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
கொரிய எக்ஸிம் வங்கியானது பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தின் ஊடாக கொழும்பு - காலி வீதி அபிவிருத்திக்காக 1990 இல் முதன்முதலில் நிதி ஒதுக்கீடு செய்தது.
அதன் தொடச்சியாக தற்போது இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள 29 அபிவிருத்தி திட்டங்களுக்காக 785.07 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிதியுதவி வழங்குவதற்கு தகுதியடைந்த 54 நாடுகளில் இலங்கை 5 ஆவது இடத்தில் உள்ளது. அத்தோடு 1978 ஆம் ஆண்டிலிருந்து 386 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இலங்கை மற்றும் கொரிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக, முதலீட்டு நடவடிக்கைகளுக்காக கொரிய எக்ஸிம் வங்கியினால் ஒதுக்கப்பட்டு வந்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை மற்றும் கொரியாவிற்கு இடையிலான மூலோபாய தொடர்புகளின் 40 ஆவது வருட நிறைவையொட்டி கொரியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது, கொரிய பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தினால் வழங்கப்படும் நிதியினை 2017 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் 300 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM