திருமலையில் இரகசிய முகாம் : ஐ.நா.குழு

19 Nov, 2015 | 02:05 PM
image

திரு­கோ­ண­மலை கடற்­படை முகா­முக் குள் இர­க­சிய தடுப்பு முகாம் ஒன்று இருப்பதை நாங்கள் அவ­தா­னித்தோம். நாம் அவ­தானம் செலுத்­திய பகு­தியில் 12 அறை
கள், எந்­த­வி­த­மான ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட வச­தி­க­ளு­மின்றி காணப்­பட்­டன. 2010 ஆம் ஆண்டு வரை இதில் ஆட்கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என நாம் சந்­தே­கிக்­கிறோம். இது தொடர்பில் புல­னாய் வுப் பிரி­வினர் விசா­ரணை நடத்தி வரு­கின்­றனர். இந்த விசா­ர­ணை­களின் முடி­வுகள் தொடர்பில் நாம் அதிக கரி­சனை செலுத்­தி­யி­ருக்­கிறோம் என்று ஐக்­கிய நாடு­களின் காணாமல் போனோர் குறித்த செயற்­கு­ழுவின் பிர­தி­நி­திகள் தெரி­வித்­தனர்.

kotadeniyawa girl

2008 ஆம் ஆண்டு கொழும்பில் கடத்தப்­பட்ட 11 பேர் திரு­கோ­ண­ம­லைக்கு கொண்டு செல்­லப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவர்கள் இந்த இர­க­சிய முகா­முக்கு கொண்டு
செல்­லப்­பட்­டி­ருப்­பார்­களா என்­பது தொடர்­பிலும் புல­னாய்வுப் பிரி­வினர் விசா­ர­ணை­களை நடத்தி வரு­கின்­றனர் எனவும் காணாமல் போனோர் குறித்த ஐ.நா.வின் செயற்­கு­ழுவின் பிர­தி­நி­திகள் குறிப்­பிட்­டனர்.


பயங்­க­ர­வாத தடைச்­சட்டம், சர்­வ­தேச மனித உரிமை தரங்­க­ளுக்கு உட்­பட்டு உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. எனவே பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்­கி­வி­டு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் எனவும் அந்­தக்­குழு வலி­யு­றுத்­தி­யது. அத்­துடன் காணாமல் போனோர் குறித்த உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு மூல­மான விசா­ர­ணைகள் சர்­வ­தேச பங்­க­ளிப்­புடன் இடம் பெற­வேண்டும். எனவும் அவர்கள் கூறினர்.


இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட ஐக்­கிய நாடு­களின் காணாமல் போனோர் தொடர்­பான செயற்­குழு பிர­தி­நி­தி­க­ளான . பேனார்ட் டுகைமி, டயி உம் பைக், ஏரியல் டுலுட்ஸ்கி ஆகியோர் நேற்று தமது விஜ­யத்தை முடித்துக் கொண்ட பின்னர் கொழும்­பி­லுள்ள ஐ.நா. அலு­வ­ல­கத்தில் நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே மேற்­கண்ட விட­யங்­களை குறிப்­பிட்­டனர்.


காணாமல் போனோர் குறித்த ஐக்­கி­ய­நா­டுகள் செயற்­கு­ழுவின் பிர­தி­நி­திகள் தொடர்ந்து கருத்து வெளி­யி­டு­கையில்:-


சந்­திப்­புக்கள்
நாம் இலங்கை விஜ­யத்தின் போது அரச அதி­கா­ரிகள் சிவில் சமூகப் பிர­தி­நி­திகள், மற்றும் காணாமல் போனோரின் உற­வி­னர்கள், பாதிக்­கப்­பட்டோர் என பல்­வேறு தரப்­பி­னரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். கொழும்பு, மட்­டக்­க­ளப்பு, காலி, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார். மாத்­தளை, முல்­லைத்­தீவு, மற்றும் திரு­கோ­ண­மலை ஆகிய பகு­தி­க­ளுக்கு நாங்கள் விஜயம் மேற்­கொண்டோம். அத்­துடன் ஜனா­தி­பதி , பிர­தமர், அமைச்­சர்கள், இரா­ணுவத் தள­பதி, பிரத நீதி­ய­ரசர், சட்­டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர், தேசிய புல­னாய்வு சேவையின் பணிப்­பாளர், சி.ஐ.டி.என். உப பணிப்­பாளர், வடக்கு, கிழக்கு ஆளு­நர்கள், புனர்­வாழ்வு அமைப்பின் தலைவர், காணாமல் போனோர் குறித்த ஆணைக்­கு­ழுவின் பிர­தி­நி­திகள், சபா­நா­யகர், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் பிர­தி­நி­திகள் ஆகி­யோரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். எலும்பு கூடுகள் கண்­டெ­டுக்­கப்­பட்ட மாத்­தளை, மன்னார் பகு­தி­க­ளுக்கும் பூசா முகா­முக்கும், திரு­கோ­ண­மலை கடற்­படை முகா­முக்கும், சி.ஐ.டி. மற்றும் டி.ஐ.டி. கட்­டி­டங்­க­ளுக்கும் விஜயம் செய்தோம்.


வாக்­கு­று­திகள் போதும்
செயற்­ப­டுத்­துங்கள்


விசே­ட­மாக எமது குழு­வா­னது காணாமல் போன­வர்­களின் உற­வி­னர்­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது. பல சந்­திப்­புக்­களை நடத்­தின. இலங்­கையின் புதிய அர­சாங்கம் பல வாக்­கு­று­தி­களை அளித்­தி­ருக்­கி­றது. அந்த வாக்­கு­று­திகள் மக்­க­ளுக்கு நம்­பிக்கை ஏற்­படும் வகையில் செய­லு­ரு­வாக்கம் பெற­வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்­களின் உரி­மையை புறம் தள்ளி நல்­லி­ணக்­கத்தை அடைய முடி­யாது. இலங்­கையில் பல­வந்­த­மான காணாமல் போன சம்­ப­வங்கள் பல திட்­ட­மிட்ட வகையில் இடம்­பெற்­றன. யுத்­தத்தின் போதும், யுத்­தத்தின் பின்­னரும் பல­வந்­த­மான ஆட்­க­டத்தல் இடம் பெற்­றன.


இரா­ணுவ பிர­சன்­னத்தை குறை­யுங்கள்
வடக்கு, கிழக்கில் அதிக பட்ச இரா­ணுவப் பிர­சன்­ன­மா­னது சமூ­கங்கள் மத்­தியில் நம்­பிக்­கை­யின்­மையை பாரிய அளவில் அதி­க­ரித்­துள்­ளது. எனவே வடக்கு, கிழக்கில் இரா­ணுவப் பிர­சன்­னத்தை குறைப்­பதன் மூலம் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்ப முடியும் என்­பது மிகவும் முக்­கி­ய­மான விட­ய­மாகும். தற்­போது இந்த விட­யங்­களை ஆழ­மாக ஆராய்ந்து உண்­மையைக் கண்­ட­றிந்து நீதியை நிலை­நாட்­டு­வ­தற்கு இலங்­கைக்கு வர­லாற்று ரீதி­யான சந்­தர்ப்பம் ஒன்று கிடைத்­தி­ருக்­கி­றது.


பாதிக்­கப்­பட்­டோரின்
ஆலோ­ச­னையை பெறுங்கள்


எனவே முன்­னெ­டுக்­கப்­படும் எந்­த­வொரு பொறி­மு­றையும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் ஆலோ­ச­னை­யு­ட­னேயே மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். சிவில் சமூ­கத்­தினர் மற்றும் பாதிக்­கப்­பட்டோர் காணாமல் போனோரின் உற­வி­னர்கள், எந்­த­வி­த­மான அச்­சமும் , அச்­சு­றுத்­தலும் இன்றி தமது செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­வேண்டும். ஆனால் இவ்­வா­றான தரப்­பினர் மீது சில அச்­சு­றுத்தும் செயற்­பா­டுகள், பாலியல் வன்­மு­றைகள், மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக எமது குழு­விற்கு தகவல் கிடைத்­தது. புல­னாய்வுப் பிரி­வி­ன­ராலும் இவ்­வா­றான செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. குறிப்­பாக எமது ஐ.நா. குழுவை சந்­தித்த பாதிக்­கப்­பட்ட சிலர் பாது­காப்பு தரப்­பி­னரால் விசா­ரணை நடத்­தப்­பட்­டுள்­ள­தாக அறி­கின்றோம். இவை ஜன­நா­யக சமூ­கத்தில் எந்த வகை­யிலும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தல்ல. இவ்­வா­றான செயற்­பா­டு­களை உட­ன­டி­யாக நிறுத்­து­வ­தற்கும் இவ்­வா­றான செயற்­பா­டுகள் தண்­ட­னைக்­கு­றி­ய­தாக ஆக்­கப்­ப­டு­வ­தற்கும் அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­தாக வேண்டும்.


பாது­காப்பு வழங்­குங்கள்
எம்மை சந்­தித்த பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பாது­காப்பை வழங்­கு­மாறும், அவர்­களை எவ்­வி­த­மான பழி­வாங்­கல்­க­ளுக்கும் உட்­ப­டுத்த வேண்டாம் என அர­சாங்­கத்தை கோரு­கிறோம். உண்­மையைக் கண்­ட­றியும் செயற்­பாட்டின் வெற்­றி­யா­னது பாதிக்­கப்­பட்டோர். மற்றும் அவர்­களின் உற­வி­னர்­களின் உணர்­வி­லேயே தங்­கி­யுள்­ளது என்­பதை அனை­வரும் புரிந்து கொள்­ள­வேண்டும்.


கடந்த சில வரு­டங்­க­ளாக 12 ஆயிரம் சம்­ப­வங்கள் தொடர்பில் நாம் அர­சாங்­கத்தை அறி­வு­றுத்­தி­யுள்ளோம். அவற்றில் 5750 சம்­ப­வங்கள் இன்னும் நிலு­வை­யி­லுள்­ளன. இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் கடந்த காலத்தில் திட்­ட­மி­டப்­பட்ட கடத்­தல்கள் இடம் பெற்­றுள்­ளன. குறிப்­பாக வெள்ளை வேன் கடத்­தல்கள், மற்றும் கப்­பத்­திற்­கான கடத்­தல்கள் என்­பன இடம் பெற்­றுள்­ளன. இலங்­கையில் எமக்குக் கிடைத்த தக­வல்­களின் படி உல­கத்­தி­லேயே இரண்­டா­வது அதி­கூ­டிய தரவை இங்கு பெற்­றி­ருக்­கின்றோம். அண்­மைக்­கா­ல­மாக இலங்கை அர­சாங்கம் மேற்­கொண்ட செயற்­பா­டு­களை வர­வேற்­கின்றோம். புலிகள் தரப்­பிலும் பல, கடத்­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.
உண்­மையை கண்­ட­றியும் உரிமை உள்­ளது


கடத்­தல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கு உண்­மையைத் தெரி­வ­தற்­கான உரிமை உள்­ளது. எந்­த­வொரு செயற்­பாடும் அனைத்­து­வ­கை­யாலும் கடத்­தப்­பட்­ட­வர்கள் தொடர்பில் ஆரா­யப்­ப­ட­வேண்டும். அங்கு அநீதி இடம் பெற முடி­யாது. காணாமல் போன­வர்­களின் உற­வி­னர்­களை சந்­தித்த போது நாம் பாரிய கவ­லைக்­கு­ரிய கதை­களை செவி­ம­டுத்தோம். ஆழ­மான மற்றும் வருந்­தத்­தக்க கதைகள் நம்மை வந்து சேர்ந்­தன. மிக அண்­மைக்­காலம் வரை இலங்­கையில் கடத்­தல்கள் இடம் பெற்­றுள்­ளன. எனவே இது போன்ற செயற்­பா­டுகள் மீண்டும் இடம் பெறாத வாறு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டுதல் மிகவும் அவ­சியம்.


விசா­ர­ணைகள் இல்லை
ஆயி­ரக்­க­ணக்­கான காணா­மல்­போனோர் சம்­பவம் தொடர்பில் இது­வரை விசா­ரணை நடத்­தப்­ப­ட­வில்லை. சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­ப­டவும் இல்லை. எனவே தற்­போது அர­சாங்கம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் வாக்­கு­றுதி அளித்­துள்­ள­வாறு காணாமல் போனோர் சம்­பவம் தொடர்பில் விசா­ரணை நடத்த வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும்.


வாக்­கு­றுதி அளித்­தது போதும் தற்­போது செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். நம்­பிக்­கைக்­கு­ரிய நட­வ­டிக்­கை­களும் உறு­தி­யான முடி­வு­களும் தேவைப்­ப­டு­கின்­றன. அதற்கு உத­வி­களை வழங்­கு­வ­தற்கு ஐ.நா. காணாமல் போனோர் செயற்­குழு தயா­ராக இருக்­கி­றது. பயங்­க­ர­வாத தடைச்­சட்­ட­மா­னது சர்­வ­தேச தரங்­க­ளுக்கு அமை­வாக உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. அந்த சட்­ட­மா­னது பல­வந்­த­மாக காணாமல் போகும் செயற்­பா­டு­க­ளுக்கு இட­ம­ளிக்­கி­றது. எனவே பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்­கு­மாறு இலங்கை அர­சாங்­கத்­திற்கு எமது குழு பரிந்­துரை செய்­கி­றது.


இர­க­சிய முகாம்
எமது குழு­வா­னது திரு­கோ­ண­மலை கடற்­படை முகா­மிற்கு விஜயம் செய்­தது. அங்கு 12 அறை­களைக் கொண்ட ஒரு இர­க­சிய தடுப்பு முகாமை நாம் கண்டோம். 2010 ஆம் ஆண்­டு­வரை இதில் மக்கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என நாம் சந்­தே­கிக்­கிறோம். இது தொடர்பில் புல­னாய்வுப் பிரி­வினர் விசா­ரணை நடத்தி வரு­கின்­றனர். இந்த விசா­ர­ணை­களின் முடி­வுகள் தொடர்பில் நாம் அதிக கரி­சனை செலுத்­தி­யி­ருக்­கிறோம் 2008 ஆம் ஆண்டு கொழும்பில் கடத்­தப்­பட்ட 11 பேர் திரு­கோ­ண­ம­லைக்கு கொண்டு செல்­லப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவர்கள் இந்த இர­க­சிய முகா­முக்கு கொண்டு செல்­லப்­பட்­டி­ருப்­பார்­களா என்­பது தொடர்­பிலும் புல­னாய்வுப் பிரி­வினர் விசா­ர­ணை­களை நடத்தி வரு­கின்­றனர்.


நீதிக்­காக நீண்­ட­காலம்
காணாமல் போனோரின் உற­வி­னர்கள் நீதிக்­காக நீண்­ட­காலம் காத்­தி­ருந்து விட்­டனர். எனவே அவர்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்ட வேண்டும். எனவே காணாமல் போனோர் குறித்து அர­சாங்கம் உட­ன­டி­யாக கொள்கை ஒன்றை தயா­ரித்து மிகவும் சுயா­தீ­ன­மாக விசா­ர­ணை­களை புதிய நிறு­வ­ன­மொன்றின் ஊடாக முன்­னெ­டுக்­க­வேண்டும். அர­சாங்கம் இந்த விட­யத்தில் காணாமல் போனோர் குறித்த அலு­வ­லகம் ஒன்றை அமைக்­க­வுள்­ள­தாக எமக்கு அறி­விக்­கப்­பட்­டது. இதற்கு ஐ.சி.ஆர்.சி. உதவி வழங்­கு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது.
இந்த காணாமல் போனோர் குறித்து ஆராயும் அலு­வ­ல­கத்தின் ஊடாக முறை­யான மற்றும் உண்­மையைக் கண்­ட­றியும் விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வேண்டும். காணாமல் போன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது தொடர்­பான உண்­மையைக் கண்­ட­றிய வேண்டும். விசா­ர­ணையின் முடிவில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அர­சாங்கம் தேவையா ன ஏற்­பா­டு­களை செய்து கொடுக்­க­வேண்டும்.


நம்­பிக்­கை­யின்­மையை போக்­குங்கள்
இந்த விசா­ரணை செய்யும் அமைப்­பா­னது தொழில்­நுட்ப ரீதி­யா­கவும், சுயா­தீ­ன­மா­கவும் பக்­கச்­சார்­பின்றி தொழிற்சார் ரீதியில் செயற்­ப­ட­வேண்டும். சிங்­கள, தமிழ், ஆங்­கி­ல­மென அனைத்து மொழி­க­ளிலும் செயற்­பா­டுகள் இடம் பெற­வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளிடம் பாரிய நம்­பிக்­கை­யின்மை இருப்­பதை நாம் காண்­கின்றோம்.இவ்­வாறு நம்­பிக்­கை­யின்மை இருப்­பதால் பொறி­மு­றை­யா­னது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். அது­மட்­டு­மன்றி உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவை அர­சாங்கம் அமைக்­க­வுள்­ள­தாக அறிந்தோம். இந்த ஆணைக்­கு­ழு­வா­னது உண்­மையைக் கண்­ட­றியும் செயற்­பாட்டில் முக்­கிய வகி­பா­கத்தை வகிக்கும் என நம்­பு­கிறோம்.
இலங்­கையில் 91 ஆம் ஆண்­டி­லி­ருந்து 11 ஆணைக்­கு­ழுக்கள் விசா­ரணை நடத்­தி­யுள்­ளன. இவற்றில் அதி­க­மா­னவை சுயா­தீனத் தன்மை குறித்து விமர்­ச­னங்­களை கொண்­டி­ருந்­தன. சில ஆணைக்­கு­ழுக்கள் முன்­வைத்த பரிந்­து­ரைகள் கூட அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இதை தொடர்பில் அவ­தானம் செலுத்­தப்­ப­ட­வேண்டும்.


பர­ண­ம­கம ஆணைக்­குழு
நாங்கள் பர­ண­கம ஆணைக்­கு­ழுவை சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். இந்த ஆணைக்­கு­ழுவின் அறிக்கை அண்­மையில் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. இந்த ஆணைக்­கு­ழுவின் சுயா­தீன தன்மை குறித்து கேள்வி எழுப்­பப்­பட்­டுள்­ளது. இந்த ஆணைக்­கு­ழுவின் செயற்­பா­டுகள் அர­சாங்­கத்தின் காணாமல் போனோர் குறித்து உரு­வாக்­க­வுள்ள அலு­வ­லகம் தொடர்பில் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது. அதனால் இந்த ஆணைக்­கு­ழுவின் அனைத்து கோப்­புக்­கை­ளயும் அர­சாங்­கத்­தினால் புதி­தாக அமைக்­கப்­ப­ட­வுள்ள காணாமல் போனோர் குறித்து அலு­வ­ல­கத்­திற்கு சமர்ப்­பிக்­கு­மாறு நாங்கள் மிகவும் வலி­மை­யாக பரிந்­துரை செய்­கின்றோம்.


மாத்­தளை மன்னார் எழும்­புக்­கூ­டுங்கள்
எலும்­பு­கூ­டுகள் கண்­டெ­டுக்­கப்­பட்ட மன்னார், மற்றும் மாத்­தளைப் பகு­திக்கு நாம் விஜயம் செய்தோம். இந்த விட­யத்தில் தடை­ய­வியல் விசா­ர­ணை­களில் முன்­னேற்றம் தேவைப்­ப­டு­கின்­றது. குறித்த பகு­தி­களை உரிய முறையில் பாது­காக்­க­வேண்டும். இந்த விட­யத்தில் தொழில் சார் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். இந்த விட­யத்தில் மேற்­கொள்­ளப்­படும் டி.என்.ஏ. பரி­சோ­தனை தொடர்பில் கரி­சனை கொள்­கிறோம். பரி­சோ­த­னை­களை மேற்­கொள்ளும் அமைப்­புக்கள் பாது­காப்பு தரப்­பினர் மற்றும் பொலி­ஸாரின் அழுத்­தத்­தி­லி­ருந்து விடு­விக்­கப்­ப­ட­வேண்டும்.


விசா­ரணை பொறி­முறை
நம்­பிக்­கை­ய­ளிக்­க­வேண்டும்
இலங்­கையின் போர்க்­குற்ற விட­யத்தில் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை கொண்டு கலப்பு நீதி­மன்­றதை அமைத்து விசா­ரணை நடத்­து­மாறு ஐ.நா. மனித உரிமை பேரவை பரிந்­துரை செய்­தி­ருந்­தது. இந்த நீதி விசா­ரணை தொடர்­பான எந்­த­வொரு தீர்­மா­ன­மாக இருந்­தாலும் அது அனைத்து இலங்கை மக்­க­ளுக்கும் நம்­பிக்­கை­ய­ளிப்­ப­தாக இருக்­க­வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்கள் அதில் நம்­பிக்கை கொள்­ள­வேண்டும். சர்­வ­தேச மனித உரிமை சட்டம், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்டம் என்­பவை மதிக்­கப்­ப­ட­வேண்டும்.
எமது குழு­விற்கு சாட்­சி­ய­ம­ளித்த மக்கள் நீதி நிர்­வாகம் தொடர்பில் தமது நம்­பிக்­கை­யின்­மையை வெளி­யிட்­டனர். எனவே விசா­ர­ணைகள் நிபு­ணத்­துவ வழக்­க­றி­ஞர்­களால் தொழில்சார் ரீதியில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும்.


பாது­காப்பு தரப்­பி­னரின் தலை­யீடு வேண்டாம்
இந்த விசா­ரணை செயற்­பா­டு­களில் பாது­காப்பு தரப்­பி­னரின் தலை­யீடு இருக்­கக்­கூ­டாது. விசா­ரணை செயற்­பா­டு­க­ளுக்கு பங்­க­ளிப்பு செய்யும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் சி.ஐ.டி. மற்றும் பாது­காப்புத் தரப்­பி­னரால் விசா­ரிக்­கப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. காணா­மல்­போன சம்­ப­வங்­க­ளினால் அதி­க­மான பெண்­களே பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். எனவே அவர்கள் பல்­வேறு சிர­மங்­க­ளையும் அசௌ­க­ரி­யங்­க­ளையும் எதிர்­கொண்டு வரு­கின்­றனர். மனை­விமார், தாய்மார், சகோ­த­ரிகள், மகள் மார் என பலர் கஷ்­டங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர். அவர்கள் தமது வேத­னை­க­ளையும், பொரு­ளா­தார கஷ்­டங்­க­ளையும் எம்­மிடம் தெரி­வித்­தனர். இலங்­கையின் நீதி முறைமை மற்றும் வழக்­காடும் செயற்பாடுகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்பாடு நம்பிக்கைக்குரியதாக இருக்கவேண்டும்.


கேள்வி:- திருமலை இரகசிய முகாமில் சித்திரவதைகள் இடம் பெற்றுள்ளனவா?
பதில்:- அது பற்றி எம்மால் கூற முடியாது. இந்த இரகசிய முகாம் குறித்து சி. ஐ.டி. விசாரிக்கிறது. இரகசிய முகாமில் ஒரு அறையின் சுவரில் 2010 என எழுதப்பட்டிருந்தது. எனவே 2010 ஆம் ஆண்டுவரை இங்கு ஆட்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இப்பகுதியில் நிலக்கீழ் அறைகளும் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. நாம் 12 அறைகளை பார்த்தோம். அந்த அறைகள் ஒரு தடுப்பு முகாமுக்கு இருக்கக்கூடிய எவ்விதமான அடிப்படை வசதிகளை கொண்டிருக்கவில்லை.
கேள்வி:- அண்மைக்காலத்தில் இந்த இரகசிய முகாமில் ஆட்கள் தடுத்து வைக்கப்படவில்லையா?
பதில்:- அவ்வாறு நாம் அவதானிக்கவில்லை. அண்மைக்காலத்தில் யாரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கமாட்டார்கள் என்றே நாம் கருதுகின்றோம்.
கேள்வி:- எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள் என கருதுகிறீர்கள்?
பதில்:- அது எமக்குத் தெரியாது. ஆனால் 2008 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து கடத்தி செல்லப்பட்டவர்கள் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. அந்த கோணத்திலும் விசாரணை இடம் பெறுகின்றன.
கேள்வி: நீங்கள் யாருடைய அழைப்பில் இங்கே வந்தீர்கள்?
பதில்:- நாங்கள் அரசாங்கத்தின் அழைப்பில் வந்தோம். நாங்கள் விசாரணை நடத்த வரவில்லை. மாறாக மதிப்பிடவே வந்துள்ளோம். எனவே அரசியல் அறிக்கைகளை நாம் விடுக்கமாட்டோம். எனவே நாங்கள் மனித உரிமை பேரவையின் ஒரு அங்கமல்ல. மாறாக ஐ.நா. வின் சுயாதீனமான ஒரு அமைப்பு.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19