ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை யின் 37 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவா வில் நடைபெற்றுவருகின்ற நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை மனித உரிமை நிலைவரம் குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் நடைபெறவுள்ளது. ஜெனிவாவில் இம்முறை இரண்டு விவாதங்கள் இலங்கை தொடர்பில் நடைபெறவுள்ள நிலையில் முதலாவது விவாதமே எதிர்வரும் வௌ்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு மீண்டும் 2017 ஆம் ஆண்டு இரண்டு வருட கால நீடிப்புக்கு உட்பட்ட இலங்கை குறித்த பிரேரணையின் அமுலாக்கத்தை அடிப்படையாகக்கொண்டே இந்த விவாதம் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே இலங்கை குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு அமர்வு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. அதன்போது இலங்கை குறித்த பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. அந்த அறிக்கையில் 50 க்கும் மேற்பட்ட நாடுகளினால் 100 க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன் அவை திருத்தங்ளுடன் நிறைவேற்றப்பட்டிருந்தன.
இலங்கை குறித்த அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது
வெ ளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை கொண்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்கவேண்டும். அத்துடன் . வடக்கு கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவெண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதுடன் ஐ.நா. பிரெரணையை முழுமையாக அமுல்படுத்தவெண்டும்.
காணாமல் போனோர் குறித்த அலுவலகத்துக்கு சுயாதீன ஆணையாளர்களை நியமிக்கவேண்டும். ( தற்போது ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது)
அந்த அலுவலகத்துக்கு தேவையான வளங்கள் வழங்கப்படுவதுடன் சரியான அதிகாரிகளும் நியமிக்கப்படவேண்டும். இதற்கு முன்னர் காணாமல் போனவர்கள் குறித்து ஆராய்ந்;த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் உடனடியாக வெளியிடப்படவேண்டும்.
காணாமல் போதல்கள் தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் என்பன தொடர்பில் சுயாதீனமான விசாரணை முன்னெடுக்கப்படுவதை உறுதிபடுத்தவேண்டும். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விபரங்களை உறவினர்களுக்கு வழங்குங்கள்.
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க சர்வதேச உதவிகளை பெறவேண்டும். அத்துடன் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட படையினர் மற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள். ( இந்த பரிந்துரையை அமெரிக்கா முன்வைத்திருந்தது)
சர்வதேச உதவியுடன் நம்பகரமான பாதிக்கபட்ட மக்களை கேந்திரமாக கொண்ட பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்கவேண்டும். உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நட்டஈடு வழங்கும் அலுவலகம் என்பனவற்றை நியமிக்கவேண்டும்.
வெ ளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை கொண்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குவதுடன் வடக்கு கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவெண்டும். இவ்வாறு பல்வேறு பரிந்துரைகள் இலங்கை குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் வௌ்ளிக்கிழமை நடைபெறவுள்ள அமர்வில் முதலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் உரையாற்றுவார். அல் ஹுசேன் ஏற்கனவே இலங்கை தொடர்பில் வெ ளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள்காட்டியே கருத்து வெ ளியிடவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இலங்கையின் சார்பில் தூதுக்குழுவின் தலைவர் உரையாற்றுவார். குறிப்பாக வௌ்ளிக்கிழமை விவாதத்தில் ஜெனிவாவுக்கான இலங்கை தூதுவர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளனர்.
இலங்கை அரசாங்கம் சர்வதேச பங்களிப்புடன் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டவேண்டுமென தெரிவித்து 2015ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டது. அந்தப் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியிருந்தது.
அந்தப் பிரேரணையானது கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இலங்கைக்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி எதிர்வரும் 2019ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM