வேலைப்பளு காரணமாக நான் ஜெனீவாவுக்குச் செல்லவில்லை, இருப்பினும் எங்களது உறுப்பினர்கள் சகல விடயங்கைளயும் அங்கு எடுத்துரைப்பார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
இன்று கிளிநொச்சி ஊருத்திரபுரம் சிவநகர் பகுதியில் மூத்தோர் சங்க கட்டடத்தினை வடமாகாண முதலமைச்சர் திறந்து வைத்த பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்தோடு ஜெனீவாவுக்கு அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
வேறு யார் யார் செல்கின்றார்கள் என்பது தனக்கு தெரியவில்லை. அனைத்து விடயங்களையும் தங்களுடைய பிரதிநிதிகள் அங்கு எடுத்துரைப்பார்கள் எனத் தெரிவித்தார்.
சிவநகர் மூத்தோர் சங்க தலைவர் ரகுபதி தலைமையில் இடம்பெற்ற மூத்த பிரஜைகள் சங்கத்தின் கட்டடத் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் கலந்து கொண்டதுடன், வைத்தியர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், கிராமத்தின் மூத்தோர் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM