இலங்கையின் அடுத்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கான அனைத்து தகைமைகளும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு காணப்படுகின்றது. 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பாரிய மாற்றங்கள் உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கூட்டு எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக கோத்தபாயவை கூட்டு எதிரணியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரிக்கின்றமை தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
இலங்கையில் 1978ஆம் ஆண்டு ஜெ.ஆர் ஜெயவர்தனவினால் அறிமுகம் செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையானது அமெரிக்க ஜனாதிபதிக்கு நிகரான அதிகாரங்களை கொண்டதாகவே காணப்பட்டது.
அரசியல் விவகாரங்களில் நாட்டு தலைவருக்கே சர்வ வல்லமை பொருந்திய அதிகாரங்கள் காணப்பட்டன. 1978 தொடக்கம் 2014 வரை இவ்வதிகாரம் நடைமுறையில் பின்பற்றப்பட்டு வந்தது.
நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி பதவி வெறும் அலங்கார பதவியாகவே காணப்படுகின்றது. நிறைவேற்று அதிகாரத்தினை தற்போதைய ஜனாதிபதி இதுவரை பயன்படுத்தாமல் பிரதமருக்கு தனது நிறைவேற்று அதிகாரத்தினை தாரைவார்த்துக் கொடுத்துள்ளார். 19 ஆவது அரசியல் திருத்தத்தின் படி ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் பெயரளவிலும், பிரதமருக்கு மறைமுகமாகவும் பலம் பெறுவதாக காணப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பொது வேட்பாளராக கோத்தபாய போட்டியிடவுள்ளமை வரவேற்கத்தக்கது. கடந்த காலத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டுக்கள் எதையும் நல்லாட்சி அரசாங்கத்தால் நிரூபிக்கமுடியவில்லை. நீதித்துறையும் உண்மையினையே நிலைநாட்டியுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியை ஆதரிக்கின்ற தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவும் கிடைக்கப்பெறும். ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தற்போது நிலையற்ற அரசாங்கத்தில் இருந்து விலகி நிலையான அரசாங்கத்தினை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் வெளிப்பாடாகவே பிரதமருக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிவப்புக் கொடி காட்டிவருகின்றனர்.
நாட்டின் நிர்வாகத்தினை மிதவாத முறையில் மாத்திரம் ஒழுங்காக நிர்வகிக்க முடியாது. மக்களின் நலனுக்காக ஆட்சியாளர் அதிரடியான போக்குகளையும் கடைப்பிடிக்கலாம் . அதுவே அரசியல் சித்தாந்தம். இவற்றை நல்லாட்சி அரசாங்கம் கடைப்பிடிக்க தவறவிட்டமையின் காரணமாகவே கடந்த காலங்களில் சிறு பிரச்சினைகளுக்கு கூட தொடர்ச்சியான போராட்டங்கள் இடம் பெற்றன. இதன் காரணமாக அப்பாவி பொது மக்களே பாதிக்கப்பட்டனர். ஆகவே இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு கோத்தபாய ராஜபக் ஷ பொருத்தமானவராகவே காணப்படுகின்றார். என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM