கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும்இடையிலான 'இந்துக்களின் சமர்' என வர்ணிக்கப்படும் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி யாழ். இந்துக்கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி அணி 165 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யாழ். இந்துக்கல்லூரி அணி ஆரம்பத்திலிருந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதன்விளைவாக பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக் ைகயைக் கடந்து யாழ். இந்துக்கல்லூரி அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
நேற்றைய முதல் நாளின் ஆட்டநேர முடிவில் யாழ். இந்துக்கல்லூரி 42 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களைப் பெற்று 47 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது. இன்று போட்டியின் இரண்டாவதும் கடைசியுமான நாளாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM