கண்டி மாவட்டம் முழுவதும் கடந்த மார்ச் 4 ஆம் திகதி இரவு முதல் பதிவான வன்முறைகள் கரணமாக இரு உயிர்கள் காவுகொள்ளப்பட்டு மேலும் 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனைவிட பொலிஸாருக்கு நேற்று காலை 6 மணி வரையிலான காலப்பகுதியில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய 4 பள்ளிவாசல்கள், 45 வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களும், வாகன சேதங்கள் தொடர்பிலான 11 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
உயிர்பலிகளில் பள்ளேகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெங்கல்ல பகுதியில் 26 வயது இளைஞனின் மரணம் தொடர்பில், பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய சந்தேக நபர்களைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழான சிறப்புக் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும் பூஜாபிட்டிய பகுதியில் வன்முறையாளர்களிடையே இருந்த கைக்குண்டு வெடித்ததில் 28 வயதான அம்பதென்ன பகுதியைச் சேர்ந்த இளஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் இந்த சம்பவத்திலேயே வன்முறைக் கும்பலில் இருந்த 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்ததாவது,
கண்டி மாவட்டத்தின் பல இடங்களிலும் மிகத் திட்டமிட்டு இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் நேற்று காலை 6.00 மணிவரை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் 45 வீடுகள் மற்றும் கடைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ரங்கல பொலிஸ் பிரிவில் வீடுகள், கடைகள் சேதப்படுத்தப்பட்ட 2 சம்பவங்களும், கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில் 5 சம்பவங்களும் மெனிக்ஹின்ன பொலிஸ் பிரிவில் ஒரு சம்பவமும், பள்ளேகல பொலிஸ் பிரிவில் 16 சம்பவங்களும் தெல்தெனிய பொலிஸ் பிரிவில் 18 சம்பவங்கள் தொடர்பிலும் வத்தேகம பொலிஸ் பிரிவில் 2 சம்பவங்களும், கண்டி பொலிஸ் பிரிவில் ஒரு சம்பவமும் இது தொடர்பில் பதிவாகியுள்ளன.
அத்துடன் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்த 4 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு மூன்றும் பூஜாபிட்டிய பொலிஸாருக்கு ஒரு முறைப்பாடும் இது தொடர்பில் கிடைத்துள்ளன.
வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் 11 முறைப்பாடுகள் உள்ளன. ரங்கல பொலிஸாருக்கு 3 முறைப்பாடுகளும், மெனிக்ஹின்ன பொலிஸாருக்கு ஒரு முறைப்பாடும் பள்ளேகல பொலிஸாருக்கு 5 முறைப்பாடுகளும், தெல்தெனிய பொலிஸாருக்கு இரு முறைப்பாடுகளும் இது தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ளன.
காயமடைந்தவர்கள் 11 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் உள்ளனர். இந்த 11 பேரும் பூஜாபிட்டியில் கைக்குண்டுவெடிப்பில் காயமடைந்தவ்ர்களாவர். வன்முறையாளர்களிடம் இருந்த கைக்குண்டு வெடித்ததில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில், அவரது சடலத்துக்கு அருகே, கைக்குண்டின் பாதுகாப்பு கம்பியை தடயவியல் பொலிஸ் பிரிவினர் மீட்டுள்ளனர்.
எனினும் கடந்த மார்ச் 5 ஆம் திகதி வன்முறையாளர்களால் கொளுத்தப்பட்ட கடை மற்றும் வீட்டுடன் கூடிய கட்டடத்துக்குள் இருந்து 26 வயதான இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டிருந்தார். புகை அவரது சுவாசப் பைகளை நிரப்பியதால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளமை பிரேத பரிசோதனை ஊடாக உறுதியாகியுள்ளது. எனினும் தீ வைப்பு ஒரு திட்டமிட்ட குற்றச் செயல் என்பதால் அந்த மரணம் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியோரைக் கைது செய்ய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழான குழுவொன்றினை விசாரணைக்கு அனுப்பியுள்ளார் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM