பங்களாதேஷ் - இந்தியா : முதலில் துடுப்பெடுத்தாடுகிறது பங்களாதேஷ்

Published By: Priyatharshan

08 Mar, 2018 | 07:05 PM
image

சுதந்­திரக் கிண்ண முத்­த­ரப்பு இரு­ப­துக்கு 20 கிண்ணத் தொடரின் இரண்­டா­வது போட்­டியில் இந்­தியா மற்றும் பங்­க­ளாதேஷ் அணிகள் இன்று பலப்­ப­ரீட்சை நடத்­து­கின்­றன.

இலங்­கையின் 70 ஆவது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு நடத்­தப்­படும் சுதந்­திரக் கிண்ண முத்­த­ரப்பு இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரை இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் நடத்­து­கி­றது.

இதில் இன்றைய 2 ஆவது போட்டியில் இந்­தியா மற்றும் பங்­க­ளாதேஷ் அணிகள் பங்­கேற்று விளை­யாடி வரு­கின்றன.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி 3 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 20 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஆரம்­ப­மான இத் தொடரின் முதல் போட்­டியில் தொடரை நடத்தும் இலங்கை மற்றும் இந்­திய அணிகள் மோதின.

இப் போட்­டியில் குசல் ஜனித் பெரே­ராவின் அதி­ரடி ஆட்­டத்­தால் நிலை­கு­லைந்­து­போன இந்­தியா தோல்­வியை சந்­தித்­தது.

ஆரம்­பத்­தி­லேயே அதிர்ச்சி தோல்வி கண்­டுள்ள ரோஹித் ஷர்மா தலை­மை­யி­லான இந்­திய அணி இன்று தனது இரண்­டா­வது போட்­டி­யில் மோத­வுள்­ளது.

இதில் பங்­கேற்­றுள்ள மற்­றைய அணி­யான பங்­க­ளாதேஷ் அணி தனது முத­லா­வது போட்­டியில் இன்று களம் காண்­கின்­றது.

இப் போட்­டியில் இந்­திய அணி எப்­ப­டியும் வெற்­றி­பெற்று தனது தொடரின் அடுத்­த­கட்­டத்­திற்கு அணியை எடுத்­துச்­செல்­லவே முயற்சிக்கும்.

மறு­மு­னையில் பங்­க­ளாதேஷ் அணியும் பலம்­மிக்க அணி­யாகக் காணப்­ப­டு­வதால் இந்­தி­யா­வுக்கு சிறந்­த­தொரு போட்­டியைக் கொடுக்கும் என்­பதில் ஐய­மில்லை.

பங்­க­ளாதேஷ் அணியின் சகிப் அல் ஹசன் காயத்தின் கார­ண­மாக தொட­ரி­லி­ருந்து வில­கி­யதால் மெஹ்மு­துல்லா அணியை வழி­ந­டத்­து­கிறார்.

பங்­க­ளாதேஷ் அணியின் துடுப்­பாட்டம் மற்றும் பந்­து­வீச்சு என இரு பிரிவுகளும் சரி­ச­ம­மாக உள்­ளதால் இந்­திய அணிக்கு சவால் விடுக்கும் விதத்தில் ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை இந்திய அணியும் முதல் போட்டியில் இலங்கையிடம் அடைந்த தோல்விக்கு பங்களாதேஷ்  அணிக்கெதிரான போட்டியில் வெற்றி கொண்டு தங்களை காத்துக்கொள்ள போராடும்.

இந்திய அணியும் பலமான அணியாக காணப்படுகிறது. துடுப் பாட்டத்தில் ரோஹித், தவான் போன்ற அனுபவ வீரர்களும் பந்து வீச்சில் சஹால், உனாட்கட் மற்றும் சஹால் ஆகியோரும் உள்ளனர்.

ஆக இன்றைய போட்டியில் யார் வெல்லப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருக்கோ T20 லீக் 2025 -...

2025-01-18 18:45:39
news-image

பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா வெற்றி

2025-01-18 17:16:04
news-image

ஆரம்ப நாளன்று ஆஸி. வெற்றி;  மூன்று ...

2025-01-18 15:21:59
news-image

ஈவா வலைபந்தாட்டத்தில் விமானப்படைக்கு 2 சம்பியன்...

2025-01-17 21:24:06
news-image

ITF ஆசியா அபிவிருத்தி சம்பியன்ஷிப்: சிறுமிகள்...

2025-01-17 20:50:01
news-image

இளம் பெட்மின்டன் வீரர்களுக்கு பண்டாரவளை சென்...

2025-01-17 17:29:38
news-image

எம்சிஏ டி பிரிவு 40 ஓவர்...

2025-01-16 20:03:33
news-image

ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20...

2025-01-16 18:13:11
news-image

மகளிர் சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்: ப்ரத்திகா,...

2025-01-15 18:24:23
news-image

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 'கால்பந்தாட்டம் மூலம்...

2025-01-14 19:24:40
news-image

டிசம்பர் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீரர்...

2025-01-14 18:34:07
news-image

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா...

2025-01-14 17:02:04