பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்

Published By: Priyatharshan

05 Mar, 2018 | 10:07 AM
image

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மாஞ்சோலை எல்லை வீதியை அண்டியுள்ள சுமார் 20 பேருக்குச் சொந்தமான காணிகளில் உள்ள வேலிகள், மரங்கள் மற்றும் குடிசைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விளைவிக்கப்பட்டதான முறைப்பாட்டின் அடிப்படையில் தாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாஞ்சோலை எல்லையை அண்டியுள்ள பகுதியில் இரவோடிரவாக காணிகள், மரங்கள், குடிசைகள் இந்தெரியாதோரால் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம்பற்றி பாதிக்கப்பட்டோர் கூறும்போது, 

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலிருந்து விடியும்வரை மாஞ்சோலை எல்லை வீதியை அண்டியுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளிலுள்ள வேலிகள், பயன் தரும் மரங்கள், மற்றும் குடிசைகளும் இன்னபிற சொத்துக்களும் விஷமிகள் சிலரால் சேதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. இதுபற்றி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம்.

இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பிரதேசத்தில் இன முறுகலை ஏற்படுத்தும் விதமாகவே இவ்விதம் முஸ்லிம்களின் பாரம்பரிய காணிகளுக்குள் அத்துமீறி சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

நாங்கள் எவரது காணிகளையும் அடாத்தாகப் பிடிக்கவோ அத்துமீறிக் குடியேறவோ இல்லை. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் எமது பாரம்பரிய இடங்களுக்கே மீளக் குடியேறியுள்ளோம் எனத் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51