அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நீச்சல் பிரிவு போட்டிகளுக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணி மொத்தம் ஆறு வீரர்களை உள்ளடக்கியுள்ளது. இதில் நான்கு வீரர்களும் இரண்டு வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்.
பொதுநலவாய நாடுகளுக்கிடையில் நடத்தப்படும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் (கொமன்வெல்த்) எதிர்வரும் ஏப்ரல் மாதம் நான்காம் திகதி அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் ஆரம்பமாகவுள்ளது.
இந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள நீச்சல் வீரர்களில் 2016 றியோ ஒலிம்பிக்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய மெத்யூ அபேசிங்க மற்றும் கிமிகோ ரஹீம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் இருவரும் கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களாவர்.
அதேவேளை மெத்யூ அபேசிங்க, அண்மையில் ஐக்கிய அமெரிக்காவின் ஒஹியோவில் நடைபெற்ற திறந்த நீச்சல் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றர் சாதாரண நீச்சலில் 5ஆவது இடத்தையும், 200 மீற்றர் சாதாரண நீச்சலில் 18ஆவது இடத்தையும் பெற்றார். இதனால், பொதுநலவாய நாடுகளுக்கான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை மெத்யூ பெற்றுக்கொண்டார்.
அதேபோல இலங்கை நீச்சல் அணியில் கிமிகோ ரஹீம், கைல் அபேசிங்க, செரன்த டி சில்வா, அகலன்க பீரிஸ், வினோலி களுஆரச்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM