மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி : ஒருவர் காயம்

Published By: Robert

12 Feb, 2016 | 03:27 PM
image

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் மாவடிவேம்பு பகுதியில் இன்று பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கள் விபத்தில் இளைஞனொருவர் பலியாகியுள்ளதுடன் மேலுமொருவர் காயமடைந்துள்ளதாக ஏறாவுர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் கிரான் விஷ்ணு ஆலய வீதியைச் சேர்ந்த குணராசா குணநிதன் (21) என்ற இளைஞனே இவ்வாறு பலியாகியுள்ளார்.

கிரானிலிருந்து தனது நண்பன் சகிதம் மோட்டார் சைக்கிளில் மட்டக்களப்பு நோக்கி வேகமாக வந்த குறித்த இளைஞன் மாவடிவேம்பு பதியில் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு அருகிலிருந்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர் மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக செங்கலடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

விபத்து தொடர்பாக ஏறாவுர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59