முத்­த­ரப்பு களமிறங்கும் சுதந்திரக் கிண்ணம் களைகட்டப் போகும் கொழும்பு

Published By: Robert

01 Mar, 2018 | 11:00 AM
image

இலங்கை -– இந்­தியா- – பங்­க­ளாதேஷ் ஆகிய நாடுகள் மோதும் முத்­த­ரப்பு இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடர் எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

நீண்ட நாட்­க­ளுக்குப் பிறகு இலங்கை அணி வெற்­றிப்­பா­தையில் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்கிறது.

இந்­நி­லையில் இலங்­கையில் நடை­பெறும் இந்த சுதந்­திரக் கிண்ணத் தொடர் குறித்து  ரசி­கர்கள் பெரும் உற்­சா­க­ம­டைந்­துள்­ளனர்.

இலங்­கையின் 70ஆவது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு நடத்­தப்­ப­டும் சுதந்­திரக் கிண்ண கிரிக்கெட் தொட­ரா­னது எதிர்­வரும் 6ஆம் திகதி ஆரம்­ப­மாகி 18 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது.

இத் தொட­ருக்­கான மூன்று நாடு­களின் அணி வீரர்­களும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளனர். இந்­திய அணியின் மூத்த வீரர்கள் சிலர் இத் தொடரில் பங்­கேற்­க­வில்லை.

இந்­நி­லையில் இந்­திய அணியின் விராட் கோஹ்லி, டோனி, பும்ரா, புவ­னேஷ்வர் குமார் ஆகியோரின்  ஓய்வால் முத்­த­ரப்பு இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடர் மதிப்­பி­ழக்­காது என இலங்கை கிரிக்கெட் சபை தெரி­வித்­துள்­ளது.

இந்­தியா, இலங்கை, பங்­களாதேஷ் அணி­க­ளுக்கிடை­யி­லான முத்­த­ரப்பு இ–20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆரம்பமாக வுள்ளது.

இதற்­கான இந்­திய அணி கடந்த வாரம் அறி­விக்­கப்­பட்­டது. இந்­திய அணியின் முன்­னணி வீரர்கள் தென்­னா­பி­ரிக்க தொடரில் தொடர்ந்து விளை­யா­டி­ய கார­ணத்­தாலும், ஐ.பி.எல். தொட­ருக்­குப்பின் தொடர்ந்து வெளி­நாட்டு தொடர்கள் இருப்­ப­தாலும் அணித் தலைவர் விராட் கோஹ்லி, விக்கெட் காப்­பாளர் டோனி, ஹர்திக் பாண்­டியா, வேகப்­பந்து வீச்­சா­ளர்கள் பும்ரா, புவ­னேஷ்வர் குமார், சுழற்­பந்து வீச்­சாளர் குல்தீப் யாதவ் ஆகி­யோ­ருக்கு ஓய்வு கொடுக்­கப்­பட்­டுள்­ளது. ரோஹித் ஷர்மா தலை­மையில் இந்­தியா இத் தொடரை சந்­திக்­கி­றது.முன்­னணி வீரர்கள் இல்­லா­ததால் தொட­ருக்கு முக்­கி­ யத்­துவம் இருக்­காது என்று கூறப்பட்டு வந்த நிலையில், வீரர்கள் ஓய்வால் முத்­த­ரப்பு இரு­ப­துக்கு 20 தொடர் மதிப்­பி­ழக்­காது என இலங்கை கிரிக்கெட் சபை தெரி­வித்­துள்­ளது. 

இது­கு­றித்து இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சும­தி­பால கூறு­கையில், இலங்கை, இந்­தி­யா­விற்கு எதி­ரா­கத்தான் விளை­யாடிக் கொண்டிருக்கிறது. தனிப்பட்ட எந்த வீரருக்கும் எதிராக நாங்கள் விளையாடவில்லை. எங்கள் அணியிலும் மெத்தியூஸ், அசேல குணரத்னே, லசித் மலிங்க ஆகியோர் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருக்கோ T20 லீக் 2025 -...

2025-01-18 18:45:39
news-image

பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா வெற்றி

2025-01-18 17:16:04
news-image

ஆரம்ப நாளன்று ஆஸி. வெற்றி;  மூன்று ...

2025-01-18 15:21:59
news-image

ஈவா வலைபந்தாட்டத்தில் விமானப்படைக்கு 2 சம்பியன்...

2025-01-17 21:24:06
news-image

ITF ஆசியா அபிவிருத்தி சம்பியன்ஷிப்: சிறுமிகள்...

2025-01-17 20:50:01
news-image

இளம் பெட்மின்டன் வீரர்களுக்கு பண்டாரவளை சென்...

2025-01-17 17:29:38
news-image

எம்சிஏ டி பிரிவு 40 ஓவர்...

2025-01-16 20:03:33
news-image

ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20...

2025-01-16 18:13:11
news-image

மகளிர் சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்: ப்ரத்திகா,...

2025-01-15 18:24:23
news-image

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 'கால்பந்தாட்டம் மூலம்...

2025-01-14 19:24:40
news-image

டிசம்பர் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீரர்...

2025-01-14 18:34:07
news-image

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா...

2025-01-14 17:02:04