தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
தென்னாபிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் கடந்த 2006ஆ-ம் ஆண்டிலிருந்து தென்னாபிரிக்க அணிக்காக விளையாடி வருகிறார். இந்தியத் தொடர் வரை 83 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 44 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
சுமார் 12 வருடங்களாக தென்னாபிரிக்க அணிக்காக விளையாடி வந்த மோர்னே மோர்கல் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்திலும் பௌன்ஸ் ஆடுகளத்திலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி எதிரணி துடுப்பாட்ட வீரர்களை திணறடிப்பதில் மோர்னே மோர்கல் வல்லவர்.
83 டெஸ்ட் போட்டிகளில் 294 விக்கெட்டுக்களும் ஒருநாள் போட்டிகளில் 188 விக்கெட்டுக்களும் இருபதுக்கு 20 போட்டிகளில் 47 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.
ஓய்வு முடிவு குறித்து மோர்கல் கூறுகையில், இந்த முடிவானது மிகவும் கடினமானது. என்றாலும் புதிய வாழ்க்கையை தொடங்க இதுதான் சரியான நேரமாக கருதுகிறேன். குடும்பத்தின் நலன்தான் முக்கியம். அவர்கள் நலன் கருதியே இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM