அம்பாறையில் பள்ளிவாசல், கடைகள் மீது தாக்குதல் : பல கோணங்களில் விசாரணை

Published By: Priyatharshan

27 Feb, 2018 | 12:37 PM
image

அம்பாறை நகரில் பள்ளிவாசல் மற்றும் சில கடைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களையடுத்து பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள உணவகம் ஒன்றுக்கு உணவருந்தச் சென்ற சில இளைஞர்கள் உணவக உரிமையாளருடன்  இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தையடுத்து குறித்த உணவகம் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது அங்குள்ள மற்றுமொரு வர்த்தக நிலையத்திற்கும் தீ வைத்துவிட்டு அருகிலிருந்த  பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவத்தில் பள்ளிவாசல் சேதமடைந்துள்ளதுடன் அங்கிருந்த வாகனங்கள் சிலவும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அம்பாறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37