வீட்டில் குறும்பு செய்து குழப்பம் விளைவிக்கும் சின்னஞ் சிறார்களை அமைதிப்படுத்தி ஓரிடத்தில் அமர வைப்பதற்கு அவர்களுக்கு ஐபாட் கணினி விளையாட்டுகளை விளையாட பெற்றோர் அனுமதிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அதேசமயம் சில வீடுகளில் உண்ண அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு ஐபாட்டில் வேடிக்கை காட்சிகளை காண்பித்து உணவூட்டும் நடைமுறையும் காணப்படுகிறது.
இந்நிலையில் இவ்வாறு ஐபாட் உபகரணத்துக்கு பழக்கப்படும் சிறுவர்களுக்கு கைவிரல் தசைகளிலான விருத்தி பாதிக்கப்பட்டு எதிர்காலத்தில் பென்சில்களைக் கூட ஒழுங்காக பிடிக்க முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவதாக பிரித்தானிய குழந்தை நல மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
விரல்களிலுள்ள தசைகளின் விருத்திக்கு உதவும் பாரம்பரிய ரீதியான விளையாட்டுப் பொருட்களுக்கு பதிலாக தொடுகையுணர்வுடைய கையடக்கத் தொலைபேசி திரைகள் மற்றும் ஐபாட்டுகள் என்பவற்றை அளவுக்கதிகமாக உபயோகிக்கும் சின்னஞ் சிறார்கள் எதிர்காலத்தில் பென்சிலைக் கூட சரியாகப் பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவதாக மேற்படி ஆய்விற்கு தலைமை தாங்கிய இங்கிலாந்து தேசிய மருத்துவமனை நம்பிக்கை மன்றத்தின் தலைவர் சால்லி பேய்ன் தெரிவித்தார்.
10 வருடங்களுக்கு முன்னர் சிறுவர்களாக இருந்தவர்களின் விரல்களுக்கு இருந்த பலம் தற்போதுள்ள சிறுவர்களில் பலருக்கு இல்லாதுள்ளதாக தெரிவித்த அவர், இன்றைய கால சிறுவர்கள் தமது ஆரம்பக் கல்வி உள்ளடங்கலாக அனைத்துக் கற்றல் தேவைப்பாடுகளுக்கும் தொடுகையுணர்வுள்ள ஐபாட்களையும் டப்லட் கணினிகளையும் பயன்படுத்தும் நிலைமை காணப்படுவது கவலை தருவதாகவுள்ளதாக கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM