இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள இரண்டாவது இருபதுக்கு- 20 கிரிக்கெட் போட்டி நாளை 11 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளரும் கோட்டே நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபிததேரரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளன. இந்நிலையில்இ அன்றைய தினத்தை தேசிய துக்கதினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து கிரிக்கெட் போட்டி நடைபெறும் திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவிருந்த போட்டியே ஒருநாள் முன்கூட்டி 11 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் 30 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றது. நேற்று கண்டி பல்லேகலையில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 215 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய குசல் மற்றும் டில்ஷான் ஆகியோர் அதிரடி ஆட்டத்தைத் தொடக்கிக் கொடுக்க அடுத்து வந்த வீரர்களும் அதையே தொடர்ந்தனர். இதில் குசல் 40 ஓட்டங்களையும், டில்ஷான் 56 ஓட்டங்களையும், ஜயசூரிய 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். அடுத்து ஜோடி சேர்ந்த சந்திமால் மற்றும் மெத்தியூஸ் ஆகியோர் அபாரமாக ஆடினர். மெத்தியூஸ் 13 பந்துகளுக்கு 37 ஓட்டங்களையும்இ சந்திமால் 19 பந்துகளுக்கு 40 ஓட்டங்களையும் விளாசினர்.
இறுதியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு 216 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 185 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிக்கொண்டது. இதில் பிளட்சர் அதிகபட்ச ஓட்டங்களாக 57 ஓட்டங்களை விளாசினார். பந்துவீச்சில் இலங்கை அணி வீரர் சேனாநாயக்க 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார். மலிங்க மற்றும் சிறிவர்தன ஆகி யோர் தலா இரண்டு விக்கெட் டுக்கள் வீதம் வீழ்த்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM