இலங்கையின் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் திடீர் இராஜினாமா.!

Published By: Robert

22 Feb, 2018 | 12:47 PM
image

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அமாரி விஜேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவரின் பதவி காலம் தொடர்பான உடன்படிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை இருந்தது.

எனினும் எதிர்வரும் மார்ச் மாதம் 30ஆம் திகதியிலிருந்து தாம் பதவிவிலகுவதாக அவர் தனது இராஜினாமா கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்ததாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவி விலகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 இந்த நிலையில், புதிய உயர்ஸ்தானிகர் நியமிக்கப்படவில்லை.

நல்லாட்சி அரசாங்கம் கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின்னர் பிரித்தானியாவுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அமாரி விஜேவர்தன உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டார்.

இதேவேளை, புலம்பெயர் தமிழர்களின் கழுத்தை அறுப்பதாக அச்சுறுத்திய பிரித்தானிய தூதரகத்திற்கான பாதுகாப்பு பொறுப்பதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ இன்று பிற்பகல் இலங்கைக்கு வரவுள்ளார்.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானியால் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இதன்போது, அவர்களை நோக்கி தனது கழுத்தை காண்பித்து சைகை செய்தமை தொடர்பில், அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

பின்னர், அவரை கடமையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்த வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின்பேரில் அவர் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

 இந்த நிலையில், இராணுவ  அதிகாரி பிரிகேடியர் பிரியங்க  பெர்னாண்டோ கலந்துரையாடல் ஒன்றுக்காகவே இலங்கைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதனை விடுத்து அவருக்கு எதிராக  ஒழுக்காற்று நடவடிக்கையோ விசாரணையோ  முன்னெடுக்கப்படாது என்று இராணுவப் பேச்சளார்  பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55