யுத்த பூமியான ஆப்கானிஸ்தான் நாட்டின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 19 வயதிலேயே ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
போரில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் இன்று கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத அணியாக வளர்ந்து நிற்கிறது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசி னால், தாஜ் மாலிக் ஆலம் என்ற மனிதரின் பெயரும் கூடவே ஒட்டிக் கொண்டு வந்துவிடும். 1987ஆம் ஆண்டு
உலகக் கிண்ணம் நடைபெற்றபோது பாகிஸ்தானில் உள்ள அகதிகள் முகாமில் சிறுவனாக இருந்தவர் இவர்.
அகதிகள் முகாமில் கிரிக் கெட் கற்றுக்கொண்ட அவர், விளையாட்டுகளுக்குக் கூடத் தடை விதிக்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட்டை நிர்மாணிக்கும் முயற்சிகளை முன்னெடுத்தவர். 'ஆப்கன் கிரிக்கெட் கழகம்' என்ற பெயரில் அணியைத் தயார் செய்தார்.
தலிபான்கள் வீழ்ச்சிக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி உருவாகக் காரணமாக இருந்தது மட்டுமின்றி அந்த அணிக்கு முதல் பயிற்சியாளராகவும் இருந்தார். கிரிக்கெட் வீரராக மட்டுமின்றி அணியின் நிர்வாகி, அணித் தேர்வாளர் எனப் பல முகங்கள் இவருக்குண்டு.
இவரின் கடும் முயற்சியால் சிறிது சிறிதாக முன்னேறிய ஆப்கான் அணி, கடந்த உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்றது.
யுத்த பூமியான ஆப்கானிஸ்தான் வரலாற்றில் கிரிக்கெட் நல்ல மாறுதலைக் கொண்டுவந்துள்ளது.
அதன் வெளிப்பாடே கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை எல்லாம் தோற்கடித்து இன்று ஆப்கானிஸ்தானின் வீரர் ஒருவர் அரியணை ஏறியிருக்கிறார்.
தற்போது நடைபெற்று முடிந்த சிம்பாப்வேக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை ஆப்கானிஸ்தான் அணி 4–1 என வெற்றிகொண்டது. இந்த போட்டிகளில் ரஷித்கான் 16 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதேபோல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். இருவரும் 787 புள்ளிகளுடன் உள்ளனர். குறிப்பாக ரஷித்கான் 19 வயது 153 நாட்களில் முதலிடத்தைப் பிடித்து மிக இளம் வயதில் முதலிடத்தைப் பிடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM