பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவ பயிற்சி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாடசாலை அதிபர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியின் போது, பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை குறித்த தலைமைத்துவப் பயிற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குருணாகல் வாரியப்பொல, வயம்ப தலைமைத்துவ பயிற்சி முகாமில், இடம்பெற்ற தலைமைத்துவப் பயிற்சி நடவடிக்கையின் போது ஏற்பட்ட திடீர் விபத்தொன்றில் காயமடைந்த அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.
இதன்போது ஹம்பாந்தோட்டையிலுள்ள பாடசாலையில் கடமையாற்றும் பெண் அதிபரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுப்பதற்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM