விஷ மருந்தினால் பாதிக்கப்பட்டு 7 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

19 Nov, 2015 | 10:54 AM
image

அக்கரபத்தனை -  பிரேமோர் தோட்டத்தில் தேயிலை மலையில் வளரும் புற்களை அழிக்க தெளிக்கபடும் விஷ மருந்தினால் பாதிக்கப்பட்டு 7 ஆண் தொழிலாளர்கள் இன்று காலை அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

hospital

ஊட்டுவள்ளி பிரிவுக்குட்பட்ட பிரேமோர் தோட்டத்தில் இன்று தோட்ட நிர்வாகம் தேயிலை மலைக்கு தெளிப்பதற்காக  புதிய களை ஒழிப்பு விஷ மருந்தை அறிமுகம் செய்து தொழிலாளர்களிடம் இதனை தெளிக்குமாறு கூறியுள்ளனர்.

இதனையடுத்து தொழிலாளரகள் வழமைபோல் மருந்து தெளிக்க சென்றுள்ளனர். ஆனால் தோட்ட  அதிகாரியிடம் பாதுகாப்பு உடைகள் கேட்டபோதிலும்  இது தற்போது தேவையில்லை இம்மருந்து பரிசோதனைக்காக தெளிக்கப்படுகின்றது. இதைபற்றி கவலைப்படவேண்டாம் என தெரிவித்ததாக பாதிக்கபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த புதிய மருந்து தொடர்பாக தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு விளக்கம் எதுவும் வழங்கபடவில்லையென இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

மருந்து தெளித்து ஒரு மணிநேரத்தில் சுகயீனமுற்ற நிலையில் பாதிக்கபட்ட தொழிலாளர்களை தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போது வைத்தியசாலை அதிகாரி இன்மையால் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியதாகவும் தோட்ட நிர்வாகம் இதனை கண்டுகொள்ளவில்லை இவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதிர்க்கட்சி உறுப்பினர்களை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு...

2025-06-17 17:16:04
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11 ஆவது புதிய...

2025-06-17 18:27:52
news-image

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார்...

2025-06-17 18:14:57
news-image

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; அகழ்வாய்வுகள் முழுமையாக...

2025-06-17 18:06:42
news-image

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் சந்தமாலி...

2025-06-17 17:48:07
news-image

ஆறு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை...

2025-06-17 17:10:33
news-image

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை...

2025-06-17 16:48:00
news-image

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின்...

2025-06-17 17:03:39
news-image

காணி மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள்...

2025-06-17 17:02:57
news-image

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது -...

2025-06-17 16:44:12
news-image

மொரட்டுவை பகுதியில் கடலுக்குச் சென்று மாயமான...

2025-06-17 16:32:10
news-image

மனைவியை சுட்டுக் கொலை செய்த கணவன்...

2025-06-17 16:21:16