வங்கி முறைமைகளில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் உட்பட ஏனைய நவீன தகவல் தொழில்நுட்பங்களைப் புகுத்துவதில் இலங்கையில் முன்னோடி வங்கியாகவும் எதிர்காலத்தின் வங்கி என்ற பெருமையுடனும் விளங்கும் ஹட்டன் நஷனல் வங்கியானது அதன் பெறுமதிமிக்க வாடிக்கையாளர்கள் வங்கியால் நடைமுறைப்படுத்தப்படும் நவீன வங்கி முறைமைகளை கடைப்படிப்பதற்காக அறி வுறுத்தல் மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்துள்ளது.
அந்த வகையில் உங்களுடைய முகவரியை மாற்றுங்கள் வெல்லுங்கள் என்ற தலைப்பில் மூன்று மாதங்களாக நடத்தப்பட்ட இந்த e – statement campaign ஊக்குவிப்பு நடவடிக்கையின் போது மின்னஞ்சல் முகவரி மூலமாக வங்கிக்கூற்றைப் பெறும் நடைமுறையைத் தெரிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு பெறுமதிமிக்க பரிசுகளை வழங்கும் ஊக்குவிப்பு சலுகையும் அறிவிக்கப்பட்டது. இதற்கேற்ப மூன்று மாதங்கள் முடிவில் மேற்கொள்ளப்பட்ட பரிசுத் தெரிவில் முதலாவது பரிசாகிய Curved LED TV தொலைக்காட்சியை HNB Emirates Customer Centre வாடிக்கையாளராகிய ஷகிரா முபீனா பேகம் மொஹமட் வென்றார். HNB Islamic Banking Unit வாடிக்கையாளராகிய மொஹமட் லபீர் பாத்திமா சஸ்மியா இரண்டாவது பரிசாகிய குடும்பத்துடன் சிங்கப்பூர் சுற்றுலா வாய்ப்பைப் பெற்றார். மூன்றாவது பரிசாகிய மூன்று Apple iPhone 6 கையடக்கத் தொலைபேசிகளை திருகோணமலை HNB வாடிக்கையாளர் ஆனந்தராஜா ரவீந்திரராஜா, கினிகத்தேன HNB வாடிக்கையாளர் தந்தனியகே தம்மிக மற்றும் கல்கிஸ்சை HNB வாடிக்கையாளர் .R.A.மஞ்சுளா லக்மினி பெரேரா ஆகிய மூவரும் பெற்றனர்.e – வங்கிக்கூற்றுகள் தற்போது சேமிப்புக் கணக்குகள், நடைமுறைக் கணக்குகள், கடன் அட்டைகள் மற்றும் NRFC, RFC கணக்குகள் உட்பட அனைத்து தனிநபர் கணக்குகள் மற்றும் கூட்டாண்மைக் கணக்குகளுக்காக வழங்கப்படுகின்றன.
வாடிக்கையாளர் e – வங்கிக் கூற்று முறைக்கு கணக்கை மாற்றிய பின்னர் தொடரும் மாதத்தின் முதல் நாளிலிருந்து அவருக்குரிய வங்கிக்கூற்று அவருடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். இந்த முறை மூலம் வாடிக்கையாளர்கள் தமது கணக்குகளை இலகுவாகப் பராமரிக்க முடிவதுடன் தபால் மூலம் வங்கிக்கூற்றுகள் கிடைப்பதில் ஏற்படும் தாமதமும் தவிர்க்கப்படுகிறது.
மேலும் அன்றாடம் பரிமாற்றங்கள் பதியப்படுவதால் வாடிக்கையாளர் எந்த சந்தர்ப்பத்திலும் இறுதிநிலுவை மற்றும் தகவல்களை அறிந்துகொள்ள முடிவதுடன் Password கட்டளைச்சொல் மூலம் மின்னஞ்சலோ கணினிப்பதிவுகளோ திறக்கப்படுவதால் e – வங்கிக்கூற்று முறை மிகவும் பாதுகாப்பானதுமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM