அமெரிக்க முன்னாள் படைவீரர் ஒருவர் இரண்டாம் உலகப் போர் காலத்தில் லண்டனில் சந்தித்து காதல் கொண்ட பெண்ணுடன் 72 வருடங்கள் கழித்து மீள இணைந்த அதிசய சம்பவம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
1944 ஆம் ஆண்டு லண்டனில் நோர் வூட் தோமஸ் (தற்போது 93 வயது) என்ற மேற்படி படைவீரரும் அவரது காதலியான ஜொய்ஸ் மொறிஸும் (தற்போது 88 வயது) முதன்முதலாக சந்தித்த போது தோமஸின் வயது 21 ஆகும். அதேசமயம் மொறிஸின் வயது 17 ஆகும். எனினும் அதே ஆண்டு ஜூன் மாதம் அவர்கள் இருவரும் பிரிய நேர்ந்தது.
போருக்குப் பின்னர் தாய்நாடான அமெரிக்காவுக்குத் திரும்பிய தோமஸ் கடிதம் மூலம் மொறிஸுடன் தொடர்பு கொண்டார்.
இதன்போது திருமணம் செய்வதற்காக அமெரிக்கா வருமாறு மொறிஸை தோமஸ் கேட்டுக் கொண்டிருந்த போதும், தோமஸுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த மொறிஸ் அவருக்கு கடிதம் எழுதுவதை நிறுத்தினார்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் வேறு வாழ்க்கைத் துணைகளுடன் திருமண பந்தத்தில் இணைந்தனர். இதனையடுத்து தோமஸின் மனைவி 2001 ஆம் ஆண்டில் மரணமானார். மொறிஸின் கணவரோ 30 வருடங்களுக்கு முன்னர் அவரை விவாகரத்துச் செய்திருந்தார்.
தோமஸ் கடந்த வருடம் தனது மகன்மாரிடம் தனது காதலியை கண்டுபிடித்துத் தர கோரியுள்ளார்.
இதனையடுத்து மகன்மார் இணையத்தளம் மூலம் மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் மூலம் மொறிஸ் அவுஸ்திரேலியாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து கடந்த புதன்கிழமை அவுஸ்திரேலிய நகரான அடெலெயிட்டில் தோமஸும் மொறிஸும் பல வருடங்கள் கடந்த நிலையில் முதன் முதலாக சந்தித்தபோது ஆனந்த மிகுதியால் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவினர். அவர்கள் இருவரும் எதிர்வரும் காத லர் தினத்தை ஒன்றாக இணைந்து கொண்டாட தீர் மானித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM