தொடரைத் தீர்மானிக்கும் தீர்க்கமான இரண்டாது இருபதுக்கு -20 போட்டி இன்று ராஞ்சி மைதானத்தில் நடைபெறவுள்ளதோடு காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடாத டில்ஷான் இன்றைய போட்டியில் களமிறங்குகிறார்.
இரு அணிக ளுக்கிடையேயான மூன்று இருபதுக்கு - 20 ஓவர் போட்டித் தொடரில் புனேயில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி அதிர்ச்சிகரமாக தோற்றது.
இந்நிலையில் இரு அணிகளும் மோதும் இரண்டாவது போட்டியில், முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா அல்லது இளம் வீரர்களை கொண்ட இலங்கையின் ஆதிக்கம் தொடருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் இந்திய அணி தோற்றால் தொடரை இழக்கவேண்டிய நிலை ஏற்படும். அதேவேளை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் வைட்வொஷ் செய்து, இலங்கையுடனான போட்டியில் சொந்த மண்ணில் தோல்வியடைவது ரசிகர்களிடையே பாரிய விமர்சனத்தை ஏற்படுத்தும். இதனால் இந்தியா இப் போட்டியை கட்டாயம் வெற்றிகொள்ளும் முனைப்பில் உள்ளது.
மேலும் டோனி தனது சொந்த ஊரில் விளையாடுவதால் வெற்றியைப் பெற்று தருவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்களும் உள்ளனர்.
இளம் வீரர்களைக் கொண்டு களமிறங்கியிருந்த இலங்கை அணி மீது அனைவரின் பார்வையும் திரும்புமளவிற்கு முதல் போட்டியில் பிரகாசித்திருந்தது.
கசுன் ராஜித, தசுன் சானக மற்றும் துஷ்மந்த சமிர ஆகியோர் தமது அதிரடி பந்து வீச்சால் இந்தியாவின் அனுபவ வீரர்களை ஆட்டம் காண வைத்திருந்தனர். எனவே இதே உத்வேகத்தில் இன்று களம் இறங்குவார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.
காயம் காரணமாக முதல் ஆட்டத்தில் விளையாடாத டில்ஷான் இன்றைய போட்டியில் களமிறங்குவது அணிக்கு மேலும் பலமாகும்.
முதல் ஆட்டத்தில் பெற்ற வெற்றியால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ள இலங்கை அணி மீண்டும் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கும் என்பதால் இப்போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் இதுவரை 7 இருபதுக்கு -20 போட்டிகளில் மோதியுள்ளதோடு 4இல் இலங்கையும் 3 இல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM