பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் 6 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டிய இலங்கை 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
பங்களாதேஷுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.
இந்நிலையில் பங்களாதேஷின் டாக்கவில் இன்று இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில் முஷ்பிகுர் ரஹீம் ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களையும் சர்க்கார் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் ஜீவன் மென்டிஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 193 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி பங்களாதேஷ் வீரர்களின் பந்துகளை மிகவும் இலகுவாக கையாண்டு, 16.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 6 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்று தொடரில் 1-0 என முன்னிலைபெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் குஷல் மென்டிஸ் 53 ஓட்டங்களையும் தசுன் சானக்க ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் சமசுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் குஷல் மென்டிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM