துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு இளைஞன் தற்கொலை

Published By: Priyatharshan

15 Feb, 2018 | 05:15 PM
image

துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு இளைஞனொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கோப்பாவெளி காட்டில் வைத்தே குறித்த இளைஞன்  துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த பகுதியில் இருந்து இளைஞனின் சடலத்துடன் துப்பாக்கியொன்றையும் இன்று காலை கரடியனாறு பொலிஸார் மீட்டுள்ளனர்.

கரடியனாறு வெளியாகண்டியைச் சேர்ந்த 19 வயதுடைய கந்தையா பிரகாஸ் என்பரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளவராவார்.

குறித்த இளைஞர் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41