உள்ளூராட்சி சபை தேர்தலில் அதிகபடியான ஆசனங்களை பெற்ற கட்சிகளுக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்குவதென ஈழமக்கள் ஜனநாயக கட்சி தீர்மானித்திருப்பதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
உள்ளூராட்சி சபை தேர்தலில் சகல கட்சிகளும் பெருமளவு சபைகளில் அறுதி பெரும்பான்மையை இழந்திருக்கும் நிலையில் தொங்கு நிலையிலேயே நிற்கின்றன.
இந்நிலையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கேட்டபோதே டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.
மேலும் இந்த விடயம் தொடர்பாக அவர் கூறுகையில்...
"உள்ளூராட்சி சபைகளில் அதிகபடியான ஆசனங்களை பெற்ற கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவ வழங்குவதென இன்று நடைபெற்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச்சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
இதனடிப்படையில் அதிகபடியான ஆசனங்கள் பெற்ற கட்சிக்கும் ,அவர்கள் மேற்கொள்ளும் மக்கள் நலன்சார்ந்த நடவடிக்கைகளுக்கும் வெளியில் இருந்து ஆதரவினை வழங்க நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
அதேபோல் அதிகபடியான ஆசனங்களை பெற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் எங்கள் கட்சியுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனாலும் அந்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை" என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM