இலங்கைக் கிரிக்கெட் அணியின் உயர் செயல்திறன் முகாமையாளரான இங்கிலாந்தைச் சேர்ந்த சைமன் வில்லிஸ் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சைமன் வில்லிஸுடன் ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய அவர் தனது 3 ஆண்டுகள் தவணைக்காலத்தை இலங்கையுடன் இணைந்து செயற்பட இருந்தார்.
எனினும் தற்போதைய இந்த முடிவுக்கமைய அவர் இரண்டு ஆண்டுகளுடன் தனது சேவையை முடித்துக் கொள்கிறார்.
கடந்த 2016ஆம் ஆண்டு சைமன் வில்லிஸ் நியமிக்கப்பட்டார். வில்லிஸை குறித்த பதவிக்கு நியமிப்பதில் கிரிக்கெட் குழுவின் அப்போதைய தலைவராக இருந்த அரவிந்த டி சில்வாவே பின்னணியில் இருந்தார்.
இதன்போது உயர் செயல்திறன் முகாமையாளர் என்ற புதிய பதவியொன்று உருவாக்கப்பட்டே அவர் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரின் பதவி விலகல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சைமன் வில்லிஸின் செயற்பாடுகள் அணிக்கு ஏற்புடையதாக இல்லை என்று லசித் மலிங்க சில நாட்களுக்கு முன்னர் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM