சுப்பர் ஸ்டார் ரஜினியுடன் கைகோர்ப்பதா, இல்லையா என்பதைக் காலமே முடிவுசெய்யும் என்று நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
பிரபல வார இதழ் ஒன்றில் இது பற்றித் தெரிவித்திருக்கும் கமலஹாசன், தன்னிடமும் ரஜினிகாந்திடமும் இதே கேள்வி தொடர்ச்சியாகக் கேட்கப்படுவதாகவும் அதற்கு ரஜினி ‘காலமே பதில் சொல்லும்’ என்று கூறுவதாகவும் தனது நிலைப்பாடும் அதுவே எனவும் தெரிவித்துள்ளார்.
“அரசியலில் கூட்டணி என்பது திரைப்படத்தில் இணைந்து நடிப்பது போன்றதன்று. அது பல்வேறு கட்ட நகர்வுகளுக்குப் பின்னரே தீர்மானிக்கப்பட வேண்டும். எனது கட்சியை எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கவிருக்கிறேன். அதன் பின் கட்சிக்கான கொள்கைகள் உருவாக்கப்படவேண்டும்.
“அதேபோல், ரஜினியின் கட்சி வகுக்கும் கொள்கைகள் எம்முடன் ஒத்திசையுமானால், அப்போது தேவைகள் ஏற்பட்டால் கூட்டணி வைத்துக்கொள்வது பற்றிச் சிந்திக்கலாம்.”
இவ்வாறு கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
தனது புதிய கட்சியின் சின்னத்தை அறிவித்த ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் நடக்கவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகத் தெரிவித்திருந்தார்.
எனினும் தற்போது அந்த நிலைப்பாட்டில் இருந்து இறங்கி, பொதுத் தேர்தலில் களமிறங்கலாம் என முடிவு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM