முதல்முறையாக விண்வெளியில் இயங்கி வரும் சர்வதேச விண்வெளி மையத்தில் பட்மிண்டன் போட்டி நடைபெற்றுள்ளமையானது அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் பட்மிண்டன் விளையாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டியில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் நடப்பதே சிரமமாக இருக்கும் நிலையில் வீரர்கள் பட்மிண்டன் விளையாடியுள்ளனர்.
நான்கு பேரும் இரு அணிகளாக பிரிந்து விளையாடிய வீடியோ அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூமிக்கு வெளியே பட்மிண்டன் விளையாடியது இதுவே முதல்முறையாகும்.
இது குறித்து பேசிய ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர்,
"விண்வெளியில் விளையாடுவது செவ்வாய் கிரகத்திற்கு சென்று கொடி நாட்டுவதற்கு சமம்' என கூறியுள்ளார்.
மேலும் இது வீரர்களுக்கு மன அமைதியை கொடுப்பதோடு அவர்கள் இடையே நட்புறவை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM