இலங்கைக் கால்பந்து தேசிய அணிக்கு மொஹமட் நிசாம் பக்கீர் அலி புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக் கால்பந்து சம்மேளனத்துடன் இரண்டு வருடகால ஒப்பந்தத்தை மேற்கொண்டே மொஹமட் நிசாம் பக்கீர் அலி இலங்கை கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்றுள்ளார்.
தற்போதுள்ள நிலையில் இலங்கைக்கென்றொரு தேசிய கால்பந்தாட்ட அணி இல்லை. அத்தோடு தேசிய அணியின் பயிற்சியாளராக இருந்த ஸ்டன்வெல் கடந்த வருடம் நீக்கப்பட்டார்.
அதிலிருந்து இலங்கை அணிக்கு பயிற்சியாளரை நியமிக்க இலங்கைக் கால்பந்தாட்ட சம்மேளனம் முன்வரவில்லை.
அத்தோடு இலங்கை தேசிய அணியையும் கலைத்தது இலங்கைக் கால்பந்தாட்ட சம்மேளனம்.
இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தெற்காசிய நாடுகளுக்கிடையிலான சாவ் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் நடைபெறவுள்ளது.
இந்தத் தொடருக்கான இலங்கை அணியை தயார்டுத்தும் நோக்கிலேயே இலங்கைக் கால்பந்தாட்ட சம்மேளனம் புதிய பயிற்சியாளரை வரவழைத்துள்ளது.
இலங்கையின் முன்னாள் தேசிய அணி வீரரான நிசாம் பக்கீர் அலி மாத்தளை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவராவார். 1976ஆம் ஆண்டு இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியில் இணைந்த பக்கீர் அலி 1980 ஆம் ஆண்டு தலைவர் பொறுப்பை ஏற்றார்.
அதன்பிறகு கொழும்பு யோர்க் அணியில் விளையாடிவந்த பக்கீர் அலி பங்களாதேஷ் பிரீமியர் லீக் கால் பந்தாட்ட அணியின் முகாமையாளராக நியமிக்கப்பட்டார்.
கேரளாவின் கால்பந்தாட்ட அணிக்கும் பயிற்சியாளராக செயற்பட்ட பக்கீர் அலியை இலங்கை அணியின் பயிற்சியாளராக்கியுள்ள நடவடிக்கையானது எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு இலங்கையின் கால்பந்தாட்டத்தை அபிவிருத்தி செய்யும் விசேட வேலைத்திட்டத்தின் முதல் அங்கமாக கருதப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM