மியன்மார் ராஜா மதம்­ பி­டித்து தாக்­கி­யதா? பெல்­லன்­வில விம­ல­ரத்ன தேரரின் இறுதிக்கிரியை இன்று

Published By: Priyatharshan

08 Feb, 2018 | 10:27 AM
image

யானை மதம் பிடித்தால் என்ன நடக்கும் என்றே தெரி­யாது. எவ்­வ­ள­வுதான் பாச­மாக இருந்­தாலும் மிருகம் மிரு­கமே. அதற்கு பெல்­லன்­வில விம­ல­ரத்ன தேரரின் சம்­பவம் சிறந்த உதா­ர­ண­மாகும். யானை மதம் பிடித்து தாக்­கி­ய­தினால் பெளத்த பிக்கு உயி­ரி­ழந்­தாரா? அல்­லது யானை தள்­ளிவிட்ட பின்னர் காய­ம­டைந்து சிகிச்சை பெற்ற போது மார­டைப்பால் உயி­ரி­ழந்­தாரா? என்­பது  அனை­வ­ரி­னதும் குழப்­ப­மாக உள்­ளது. பெல்­லன்­வில பிக்­கு­விற்கு நடந்­தது என்ன? என்­பது தொடர்பில் ஆராய்­வ­தற்கு பெல்­லன்­வில விகா­ரைக்கு சென்று பல தக­வல்­களை பெற்­றுக்­கொள்ள முடிந்­தது.

பெல்­லன்­வில விம­ல­ரத்ன தேரர் மிகவும் சிறந்­த­­வரும் பண்­பா­ன­வரும் ஆவார். அது­மாத்­தி­ர­மின்றி இன நல்­லி­ணக்­கத்­திற்­கா­கவும் பெரும் பாடு­பட்ட பெளத்த பிக்­கு­களில் ஒரு­வ­ராவார். சர்­வ­மத பேர­வையை உரு­வாக்கி தனது நாட்டின் அமைதி போக்­கிற்கு பெரும் வித்­திட்­ட­வரே பெல்­லன்­வில அமிர தேர­ராவார். பெளத்த மத பக்­தர்­களின் எதிர்ப்­பி­னையும் துச்­ச­மாக மதிக்­காமல் நல்­லி­ணக்­கத்­திற்­காக செயற்பட்டார்.

இதன்­படி இப்­ப­டி­யான பண்­பான பிக்கு  ஒரு­வ­ருக்கு நேர்ந்த கதை கவ­லை­க்கு­ரி­ய­தாகும். என்ன நடந்­தது என்­பது தொடர்பில் தேடு­வ­தற்கு நாம் பெல்­லன்­வில விகா­ரைக்கு சென்று உண்மை நிலை­வ­ரத்தை கேட்­ட­றிந்தோம். எனினும் விகாரை நிர்­வாகம் உண்­மை­யான சம்­ப­வத்தை மறைப்­ப­தாக தக­வல்கள் பரவி வரு­கின்­றன. 

எனினும் பெளத்த விகாரை நிர்­வாகம் கூறும் கதை என்ன என்­ப­த­னையும் அவ­தா­னிக்க வேண்டும். இதன்­படி யானையை வளர்ப்­பவர் விடு­மு­றையில் சென்­றுள்­ள­மை­யினால் பெல்­லன்­வில விமல ரத்ன தேரர் யானை இருக்கும் இடத்­திற்கு சென்று யானையின் நீண்ட கொம்பை பிடித்­துக்­கொண்டு வாழைப்­ப­ழத்தை வழங்­கி­யுள்ளார். இதன்­போது யானை பல­மான முறையில் தலையை ஆட்­டி­யுள்­ளது. இதனால் பெல்­லன்­வில விமலரத்ன தேரர் வீசப்­பட்டு சென்று தரையில் இருந்த கல்லில் அடி­பட்டு கடு­மை­யான காயத்­திற்கு உள்­ளாகி களு­போ­வில வைத்­தி­யசா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார். இத­னை­ய­டுத்து எலும்பு கடு­மை­யாக தாக்­கப்­பட்­டுள்­ள­மை­யினால் சத்­திர சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்­தி­யர்கள் ஆலோ­சனை வழங்­கிய போதும் அந்த சத்­திர சிகிச்­சைக்­கான வச­திகள் களு­போ­வில வைத்­தி­ய­சா­லையில் இல்­லா­த­மை­யினால் உடனே ஆசிரி வைத்­தி­யசா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்டார். இதன்­போது சத்­திர சிகிச்சை முடி­வ­டைந்த பின்னர் மார­டைப்­பினால் உயி­ரி­ழந்­த­தாக பெல்­லன்­வில விகாரை நிர்­வாகம் குறிப்­பிட்­டது. 

எனினும் பெல்­லன்­வில விகாரை நிர்­வாகம் கூறும் கதைக்கு மாற்­ற­மாக பல்­வேறு தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. இதன்­படி தெரி­ய­வந்த தக­வலின் பிர­காரம் பெல்­லன்­வில விம­ல­ரத்ன தேரர் யானைக்கு வாழைப்­பழம் வழங்க சென்ற போது யானையின் கடு­மை­யான தாக்­கு­த­லுக்கு உள்­ளாகி உடலின் எலும்­புகள் சிதை­வ­டைந்­துள்­ள­தா­கவும் இத­னால்தான் மார­டைப்பு ஏற்­பட்டு உயி­ரி­ழந்­த­தாக தக­வல்கள் பர­வ­லாக நாடு­பூ­ரா­கவும் பரவி வரு­கின்­றது. யானை மதம் பிடித்து தாக்­கி­யது உண்­மை­யான தக­வலா என்­பதில் சந்­தேகம் உள்­ளது.

இதன்­பி­ர­காரம் பெல்­லன்­வில விகா­ரையின் நிர்­வா­கத்­தி­னரும் பெல்­லன்­வில நலன்­புரி மன்­றத்தின் உப தலை­வ­ரு­மான அத்­த­பத்து தேர­ரிடம் வின­விய போது,

பெல்­லன்­வில விமல ரத்ன தேரரின் மரணம் தொடர்­பாக உண்­மைக்கு புறம்­பான தக­வல்களை பரப்பி வரு­கின்­றனர். எனினும் அதில் உண்­மை­யில்லை. நாம் எத­னையும் மறைக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. பெல்­லன்­வில விகா­ரையின் சொந்த செல­வினால் மியன்­மாரில் இருந்து குறித்த யானை சுமார் எட்டு வரு­டத்­திற்கும் முன்னர் இங்கு கொண்டு வரப்­பட்­டது. இதன் பெயர் மியன்மார் ராஜா­வாகும். இந்த யானை பெல்­லன்­வில விமலரத்ன தேர­ருடன் பாசத்­துடன் நடந்­து­கொள்ளும். அதே­போன்­றுதான் தேரரும் யானை­யுடன் மிகவும் பாசம் கொண்­ட­வ­ராவார். இதன்­போது யானை வளர்ப்­பவர் விடு­மு­றைக்கு சென்­ற­மை­யினால் தேரர் யானைக்கு வாழைப்­ப­ழத்தை வழங்க முற்­பட்ட போது யானை தனது தலையை பல­மாக ஆட்­டி­யதன் கார­ண­மாக யானை கொம்­பினை பிடித்­தி­ருந்த தேரர் விழுந்து கடு­மை­யான காயத்­திற்கு உள்­ளா­கி­யதன் பின்னர் களு­போ­வில வைத்­தி­ய­சாலையில் அனு­ம­திக்­கப்­பட்ட பின்னர் அங்கு சத்­திர சிகிச்­சைக்­கான இயந்­திரம் இல்­லா­மை­யினால் தேரர் ஆசிரி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட பின்னர் மார­டைப்பின் கார­ண­மாக உயி­ரி­ழந்தார். களு­போ­வில பிரேத பரி­சோ­தனை அறிக்­கை­யிலும் இது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளது. 

ஊட­கங்­களின் ஊடாக வெளி­வந்த தக­வலின் பிர­காரம் யானை கடு­மை­யாக தாக்கி மிதித்­தி­ருந்தால் தேரரை வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்ல வேண்­டி­ய­தில்லை. அப்­ப­டி­யானால் தேரர் உடனே உயி­ரி­ழந்­தி­ருப்பார். காப்­பாற்ற முடி­யாமல் போயி­ருக்கும். ஏனெனில் யானை மதம்­பி­டித்தால் உடனே காலால் மிதிப்­பது யானையின் சுபா­வ­மாகும். ஆனால் மியன்மார் ராஜா அப்­படி செய்­ய­வில்லை. இதுதான் உண்­மை­யாகும்  என்றார்.

எவ்­வா­றா­யினும் பிரேத பரி­சோ­த­னையில் மார­டைப்பு என்றே கூறப்­பட்­டுள்­ளது. ஆகவே சான்­றுப்­ப­டுத்­தப்­பட்ட உண்­மை­யினை நம்­பித்தான் ஆக­வேண்டும். எனினும் பெல்­லன்­வில விமலரத்ன தேரர் பண்­பு­மிக்க ஒரு­வ­ராவார். சிறந்த கல்வி அறி­வினைக் கொண்ட பிக்­கு­வாவார். உயி­ரி­ழக்கும் வரையும் ஸ்ரீஜ­ய­வர்­த­ன­புர பல்­க­லை­க்க­ழ­கத்தின் பீடா­தி­ப­தி­யாக சேவை புரிந்தார். இந்த சந்­தர்ப்­பத்தில் இவர் எப்­ப­டிப்­பட்­டவர். இவ­ரது வர­லாற்றை பற்­றியும் கூறித்தான் ஆக­வேண்டும்.

பெல்­லன்­வில தேரரின் வர­லாறு

1942 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம்­ திகதி பிறந்து  பெல்­லன்­வில விகா­ரையில் துற­வி­யானார்.  பெல்­லன்­வில ஸ்ரீ சோம­ரத்ன தேரர் அன்­னாரின் ஆசா­னாகும். இவர் தனது ஆரம்ப கட்ட பிக்கு கல்­வி­யினை வாத்­துவ மொல்­லி­கொட பிர­வ­ஜ­னோ­தய பிரி­வென்னில் கற்றார். உயர் பிரிவென் கல்­வியை பேலி­ய­கொடை வித்­தி­யா­லங்­கார பிரி­வென்னில் பயின்றார். பிரிவென் கல்­வியின் பின்னர் களனி பல்­க­லை­க­்கழ­கத்தில் பிர­தான பட்­டத்தை பெற்­றுக்­கொண்டார். அதன்­பின்னர் கெள­ரவ பட்­டத்தை ஜய­வர்­தன பல்­க­லை­க்க­ழ­கத்தில் பெற்­றுக்­கொண்டார். இந்த காலப்­ப­கு­தியில் ஆசி­ரி­ய­ராக இரத்­ம­லானை பிரிவென் ஆசி­ரிய பயிற்சி வித்­தி­யா­ல­யத்தில் கட­மை­யாற்­றினார். அதன்­பின்னர் இங்­கி­லாந்து சென்று லென்­கெஸ்டர் பல்­க­லை­க­்கழகத்தில் பயின்று கலா­நிதி பட்­டத்தை பெற்­றுக்­கொண்டார். இந்த பட்­டத்தை பெற்ற பின்னர் மீண்டும் இலங்­கைக்கு வருகை தந்தார். அதன்­பின்­னர் ஜய­வர்­த­ன­புர பல்­க­லை­க்க­ழ­கத்தில் பேரா­சி­ரி­ய­ராக கட­மை­யாற்­றினார். பாளி, பெளத்த பீடத்­தி­லேயே பேரா­சி­ரி­ய­ராக இருந்தார். அதன்­பின்னர் சில காலப்­ப­கு­தியின் பின்னர் பீடத்தின் பிர­தா­னி­யாக மாறு­கின்றார். அந்த காலப்­ப­கு­தியின் போது பெல்­லன்­வில விகா­ரை­யி­னதும் அருகில் உள்ள கிராம விகா­ரை­க­ளுடன் நெருங்­கிய தொடர்­பினை கொண்­டி­ருந்தார்.  அது­மாத்­தி­ர­மின்றி இலங்கை பூரா­கவும் தொடர்­பு­களை வைத்­தி­ருந்தார். தேசிய நட­வ­டிக்­கைகள், கல்வி, கலா­சார செயற்­பா­டு­களில் தைரி­ய­மாக செயற்­பட்டார். இதன்­போது பெல்­லன்­வில சோம­ரத்ன தேரர் உயி­ரி­ழந்ததையடுத்து பெல்­லன்­வில விகா­ர­ா தி­ப­தி­யாக பெல்­லன்­வில விம­ல­ரத்ன தேரர் நிய­மிக்­கப்­பட்டார்.

இவர் விகா­ரா­தி­ப­தி­யான பின்னர் பெல்­லன்­வில எசல பெர­ஹ­ராவின் வேலைத்­திட்­டங்­களை திட்­ட­மிட்டு முன்­னெ­டுத்து சென்றார். அத்­துடன் பெல்­லன்­வில விகா­ரை­யுடன் சம்­பந்­தப்­பட்ட அமைப்­புகள், இளைஞர் சங்கம் போன்ற இயக்­கங்கள் இருந்­தன. இத­னுடன் நெருங்­கிய தொடர்­பினை வைத்து நாடு­பூ­ரா­கவும் தனது சேவையை முன்­னெ­டுத்தார். பாட­சாலை மாண­வர்­க­ளுக்­காக 1980 ஆம் ஆண்­ட­ளவில் பெல்­லன்­வில பிரஜா அபி­வி­ருத்தி மன்­றத்தை ஆரம்­பித்தார். இதன் உத­வி­யுடன் தொழில்­நுட்­ப­வியல் கல்­லூ­ரி­களை ஆரம்­பித்தார். இதில் 12 பாட­வி­தா­னங்கள் உள்­ளன. இந்த மன்­றத்தில் தற்­போது வரைக்கும் அவரே தலை­வ­ராக செயற்­பட்டார். 

இந்த மன்­றத்தின் உத­வி­யுடன் மருத்­துவ முகாம்­களை நடத்­தி­யதுடன் இல­வச மூக்கு கண்­ணாடி வழங்­கியும் வந்தார். மருந்­து­க­ளையும் இல­வ­ச­மாக வழங்க நட­வ­டிக்கை எடுத்தார். அத்­துடன் விகா­ரைக்கு என்று வாகன தரிப்­பிடம் ஒன்றை நிர்­மா­ணித்து அதில் இருந்து வரும் வரு­மா­னத்தை சத்­திர சிகிச்­சைக்­காக அன்­ப­ளிப்பு செய்தார். அத்­துடன் இயற்கை அனர்த்தம் ஏற்­பட்ட போதும் உத­வியும் செய்­துள்ளார். சுனாமி அனர்த்தம் ஏற்­பட்ட போது அம்­ப­லாங்­கொடை பகு­தியில் ஒரு கிராமம் ஒன்­றையும் உரு­வாக்கி வீடு­களை நிர்­மா­ணித்து விகா­ரை­யொன்­றையும் திறந்து வைத்தார்.

அத்­துடன் மதம், இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு சர்­வ­மத பேர­வையை ஆரம்­பித்தார். இதில் அனைத்து மதத்­த­லை­வர்­களும் அங்கம் வகிக்­கின்­றனர். இதன்­போது ஹலால் பிரச்­சினை ஏற்­பட்ட போது பெல்­லன்­வில விகா­ரைக்கு முஸ்­லிம்­களை அழைத்து பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­கினார். யாழ்ப்­பா­ணத்­திற்கும் அவர் சென்­றுள்ளார். இதன்­போது அந்த பகு­தியில் பெளத்­தர்­க­ளிடம் இருந்து பெரும் எதிர்ப்பு ஏற்­பட்ட போதும் அதனை துச்­ச­மாக மதிக்­காமல் செயற்­பட்டார். அத்­துடன் நாடு பிள­வு­ப­டுத்­தாமல் இருக்க கண்ணும் கருத்­து­மாக செயற்­பட்டார். மேலும் அர­சி­ய­லமைப்புக்கும் அவர் எதிர்ப்­பினை வெளி­யிட்டார். மனதில் உள்­ளதை மறைக்­காமல் வெளிப்­ப­டை­யாக எதனையும் அச்சமில்லாமல் கூறுவார். மேலும் நாட்டு தலைவர்களுக்கும் இடைக்கிடையே உபதேசங்களை வழங்குவார். மத்திய வங்கி பிணைமுறி மோசடிக்கு அதிகளவில் குரல் கொடுத்தவர்களில் இவரும் ஒருவராகும். அத்துடன் சர்வதேச பெளத்த சம்மேளனத்தின் செயலாளராகவும் கோட்டை சங்க சம்மேளனத்தில் தலைவராக தற்போது வரைக்கும் செயற்பட்டு வந்துள்ளார். உலக தலைவர்கள் பலருடன் இவர் தொடர்பினை வைத்துள்ளார். எனவே இவரது இழப்பு நாட்டுக்கு மாத்திரமல்ல சிறுபான்மை இனத்தவர்களுக்கும் பேரிழப்பாகும்.

இறுதி கிரியை ஏற்பாடுகள்

இந்நிலையில் பெல்லன்வில விமலரத்ன தேரரின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக பெல்லன்வில விகாரையில் வைக்கப்பட்டுள்ளது. இவரது பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆகியோரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்நிலையில் இவரது இறுதி கிரியைகள் இன்று 8 ஆம் திகதி ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைகழக மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிலையான தீர்வுகளுக்கான தேசிய கொள்கை அவசியம்...

2025-02-07 11:00:58
news-image

பிள்ளையானிற்கு பிணை கிடைக்க உதவிய பசில்...

2025-02-06 16:41:49
news-image

வலிமையானவர்கள் தோல்வியுற்ற இடத்தில் - இலங்கையில்...

2025-02-05 21:23:34
news-image

ஊடகவியலாளர்களே அலட்சியப்படுத்தாது உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்...

2025-02-05 17:05:14
news-image

பாராளுமன்றத்துக்கு வெளியே சுத்தப்படுத்த வேண்டியவை…!

2025-02-05 17:19:24
news-image

லசந்தவின் வாகனச்சாரதியை கடத்தியவர் ; லசந்தவின்...

2025-02-05 16:21:31
news-image

பாரதிய ஜனதாவின் உள்நாட்டு அரசியல் நிகழ்ச்சி...

2025-02-05 09:56:52
news-image

எதிர்காலத்துக்காக ஈரநிலங்களைப் பாதுகாப்போம்!

2025-02-04 17:15:47
news-image

இராணுவத்தை போற்றி பாதுகாக்கும் பாரத இந்தியா

2025-02-04 13:34:29
news-image

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயமும் அதன் தாக்கங்களும்

2025-02-04 10:59:53
news-image

முன்னெச்சரிக்கையால் பாதிப்பை குறைத்து புற்றுநோயை வெல்வோம்!...

2025-02-04 11:05:21
news-image

2025க்கான ஒதுக்கீடு சட்டமூலமும் பொருளாதார நோக்கும்

2025-02-03 20:08:27