மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பேர்ப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
நேற்று 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் அவர்களது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து அவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தடுத்து வைத்து வாக்குமூலங்களை பெற்றதையடுத்து, நேற்று இரவு கொழும்பு கோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து , அவர்களை இன்றைய தினம் காலை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து பேர்ப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் காலை மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அவர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
மேலதிக செய்திகளுக்கு அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன நீதிமன்றில் ஆஜர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM