பத்திரிகையாளர், விளம்பரப் பட இயக்குநர், பதிப்பாளர் என பன்முகம் கொண்ட எம்.ஆர்.பாரதி, இப்போது முதல் முறையாக ‘அழியாத கோலங்கள்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். அவரது முதல் படம் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்...
இந்தப் படம் பாலுமகேந்திரா இயக்கிய ‘அழியாத கோலங்கள்’ படத்தின் ரீமேக்கா?
‘அழியாத கோலங்கள்’ படத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. எங்களுடைய குரு பாலுமகேந்திராவுக்கு மரியாதை செய்யவே இந்தத் தலைப்பை வைத்தோம். மற்றபடி அவருடைய படங்களை ரீமேக் செய்வது என் நோக்கமல்ல.
இந்தப் படத்தின் கதைக்களம் என்ன?
கல்லூரியில் ஒன்றாகப் படித்த ஒரு ஆணும், பெண்ணும் 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்கிறார்கள். அவர்கள் சந்திக்கிற ஒரு இரவு எப்படி இருக்கும் என்பது தான் இந்தப் படத்தின் கதை. இது வழக்கமான கதை அல்ல. நான் 20 ஆண்டுகளாக இயக்குநர் ஆவதற்கு முயற்சி செய்து வருகிறேன். என் நண்பர்களோடு அமர்ந்து பல கதைகளை விவாதித்திருக்கிறேன். அவ்வப்போது ஒரு கதையை எழுதுவேன். ஆனால், எழுதி முடிக்கும்போது அக்கதை எனக்கே பிடிக்காமல் போய்விடும்.
ஏற்கெனவே மற்றவர்கள் செய்த விஷயத்தையே பண்ணக் கூடாது. ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று நினைப்பேன். இறுதியாக நானும் என் நண்பர் அர்ச்சனாவும் ஒரு கதையைப் பற்றி பேசினோம். அக்கதை தமிழுக்கு புதுமையாக இருந்தது. படம் பார்ப்பவர்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமான கதைக்களத்தை இப் படம் கண்டிப்பாக கொடுக்காது என்பதால் அதை படமாக இயக்குகிறேன்.
40 வயது கடந்த நாயகிகளை வைத்து படம் எடுக்கிறீர்களே?
40 வயது பெண்களுக்கான வாழ்க்கை ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி சொல்வதற்கு படங்கள் எடுக்கப்படவில்லை. ஆண்களைப் பொறுத்தவரை 50 வயது ஆண்களை மையப்படுத்திக்கூட படங்கள் வருகின்றன. ஆனால் பெண்கள் விஷயத்தில் அவ்வாறு வருவதில்லை.
நடுத்தர வயது பெண்களின் கதைகளை யாரும் யோசிப்பதே இல்லை. அவர்களை ஒன்று அம்மாவாக ஆக்கி விடுகிறார்கள், இல்லையென்றால் அண்ணியாக்கி விடுகிறார்கள்.
அதை தமிழ் சினிமாவின் ஒரு குறையாகவே பார்க்கிறேன். 40 வயது பெண்களுக்கான பிரச்சினைகளை அலசும் படங்களை தொடர்ச்சியாக பண்ண வேண்டும் என்பதில் நானும், அர்ச்சனாவும் உறுதியாக இருக்கிறோம். 40 வயதில்தான் உண்மையான காதல், பாசம் எல்லாமே சரியாக இருக்கும். 40 வயதைத் தாண்டிய காதல்தான் நிஜமான காதல் என்று நான் நம்புகிறேன்.
பாலுமகேந்திராவிடம் நீங்கள் பணியாற்றவில்லை. இருப்பினும் அவர் மீதான ஈர்ப்பு வருவதற்கான காரணம் என்ன?
மக்களுக்கு நல்ல, தரமான படங்களைக் கொடுத்தவர் பாலுமகேந்திரா சார். அதனாலேயே எனக்கு அவர் மீது ஈர்ப்பு வந்தது. அவரைப் போல நானும் தரமான படங்களை இயக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM