வணிக வளாகங்களிலும், சந்தையிலும் தற்போது பெரும்பாலான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, அதனை பக்கற்றுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்கிறார்கள். இதனை இன்றைய இளையத்தலைமுறையினர் நேரமின்மை காரணமாக ஓர்டர் செய்தோ அல்லது வாங்கியோ சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு குடல் அழற்சி நோய் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
பக்கற்றுகளில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் உணவுகளில் சாப்பிடுவதால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் சேதமடைகின்றன அல்லது அழிகின்றன அல்லது செயல்படாமல் முடங்கிபோகின்றன. இதனால் குடலில் உணவுகள் முழுமையாக ஜீரணம் ஆகாமல் வெளியேறுகிறது. இதனால் குடலில் இயல்பாக இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியின் செயல்பாட்டில் சமச்சீரற்றத்தன்மை உருவாகிறது. இது மலச்சிக்கலையும், அஜீரணக் கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது. அத்துடன் இவ்வகையான உணவு வகைகள் சளியை உருவாக்குகின்றன என்றும் எடுத்துரைக்கிறார்கள். அத்துடன் பசியின்மை, குடல் புண், க்றோன் டீஸீஸ், திடீர் எடைக் குறைவு போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.
மேலும் அண்மைய ஆய்வின் படி உலகம் முழுவதும் 5 மில்லியன் மக்கள் இது போன்ற பாதிப்பிற்கு ஆளாகியிருக்கிறார்கள். இதிலிருந்து தற்காத்துக் கொள்ளவேண்டும் என்றால், முதலில் இவ்வகையான உணவு வகைகளை முற்றாகத்தவிர்க்கவேண்டும். வேறு வழியில்லாமல் இதனை சாப்பிடவேண்டிய சூழல் ஏற்பட்டால் குறைவாக சாப்பிடலாம் அல்லது சாப்பிட்ட பிறகு தண்ணீரை நிறைய அருந்தவேண்டும்.
டொக்டர் சந்திரசேகர்
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM