நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களை யும் உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்பட்ட 4 மணி நேர விஷேட நடவடிக்கைகளில் 1670 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவுக்கு அமைவாக, மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் நேரடி கட்டுப்பாட்டில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களின் வழி நடத்தலில் இந்த சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போதே இந்த 1670 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கேசரிக்கு தெரிவித்தார்.
நேற்று முன் தினம் இரவு 11.00 மணி முதல் நேற்று அதிகாலை 3.00 மணி வரை இந்த சுற்றி வலைப்பு நடவடிக்கை தொடர்ந்ததாகவும் இதன்போது நாடளாவிய ரீதியில் 1308 வீதிச் சோதனை சாவடிகள் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டு அவற்றின் ஊடாக 20913 வாகனங்கள் மற்றும் 42673 பேரை சோதனை செய்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 1670 பேரில் 719 பேர் குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 554 பேர் சந்தேகத்தின் பேரிலும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 397 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விஷேட நடவடிக்கையின் போது நாடளாவிய ரீதியில் விஷ போதைப் பொருள் தொடர்பிலான 420 நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது ஹெரோயின் 13.943 கிராமும் கஞ்ஞா 11.293 கிலோவும், வேறு போதைப் பொருட்கள் 176 மில்லி கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் சட்ட விரோத மதுசாரம் 3860 லீற்றர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM