மணமான இளம்பெண் மர்மமான முறையில் மரணம்

Published By: Devika

31 Jan, 2018 | 04:46 PM
image

யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

அன்டன் உதயராஜா டிலக்ஸி (22) என்ற இந்தப் பெண் திருமணமானவர்.

சம்பவம் இடம்பெற்ற தினமான இன்று காலை, தனது கணவரும் பெற்றோரும் கோயிலுக்குச் சென்றிருந்த சமயம் இவர் மட்டும் வீட்டில் தனித்திருந்துள்ளார்.

வெளியே சென்றிருந்தவர்கள் வீடு வந்து பார்த்தபோது, டிலக்ஸி இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.

அதேசமயம், அவர்களது வீடு கொள்ளையடிக்கப்பட்டிருந்ததையும் அவர்கள் கவனித்துள்ளனர்.

இதையடுத்து, சம்பவம் குறித்து பொலிஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

வீட்டைக் கொள்ளையடிக்கும் நோக்கில் வீடு புகுந்த மர்ம நபர்கள், சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியான டிலக்ஸியைக் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08