நான்கு மணிநேரத்தில் 5,385 சம்பவங்கள்

Published By: Devika

31 Jan, 2018 | 04:36 PM
image

நாடளாவிய ரீதியில் நேற்று (30) இரவு நடத்தப்பட்ட நான்கு மணிநேர திடீர் சோதனையில், ஏகப்பட்ட குற்றச் சம்பவங்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

அண்மைக் காலமாக இரவு நேரங்களில் பொலிஸாரும் போக்குவரத்துப் பொலிஸாரும் இணைந்து திடீர் தேடுதல் வேட்டைகளை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் இதுபோன்ற தேடுதல் நடவடிக்கைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, நேற்றும் நாடு முழுவதும் திடீர் வாகன சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், பல்வேறு குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1670 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர்.

அத்துடன், மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் ஐந்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தவிரவும் 3715 போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பான சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் நிர்வாக, ஊழல் ஒழிப்பு நடவடிக்கை...

2026-07-22 18:14:00
news-image

ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின்...

2026-07-22 12:54:12
news-image

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனத்தை உருவாக்கும்...

2026-07-22 17:34:35
news-image

காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக...

2026-07-22 14:18:56
news-image

ஜனாதிபதி மாளிகைகளை பயனுள்ள முறையில் பயன்படுத்த...

2026-07-22 14:50:18
news-image

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை...

2026-07-22 14:49:18
news-image

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண நிர்ணயத்துக்கான மக்கள்...

2026-07-22 14:52:16
news-image

புகையிரத சேவையை நவீனமயமாக்க 2027–2029 அபிவிருத்தித்...

2026-07-22 23:07:26
news-image

வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால்...

2026-07-22 15:49:49
news-image

பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு, 106 பேர்...

2026-07-22 14:52:40
news-image

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள்...

2026-07-22 16:01:58
news-image

சஜித் - ரணில் பங்கேற்புடன் நாளை...

2026-07-22 16:02:17