கடவுள் அனுமரை நினைத்து எனது மகனுக்கு பெயர் சூட்டினோம். அதனால்தான், அனுமாரை போலவே எனது மகனும் சிரஞ்சீவியாக மரணத்தை ஜெயித்து வந்துள்ளான் என்று பாதுகாப்பு நடவடிக்கையின் போது பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் 6 நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்ட இராணுவ வீரர் ஹனுமந்தப்பாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
ஹனுமந்தப்பாவின் உறவினர் ரமேஷ் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எங்களது வேண்டுதலை கடவுள் காது கொடுத்து கேட்டுள்ளார்.
ஹனுமந்தப்பாவின் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது. ஹனுமந்தப்பா உயிரோடு இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அதேநேரம் அரசு தரப்பில் இருந்து அவர் உயிரோடு இருப்பது குறித்தும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறித்தும் ஹனுமந்தப்பா குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.
தொலைக்காட்சி செய்தியை பார்த்துதான், நாங்கள் அறிந்து கொண்டோம். தற்போது ஹனுமந்தப்பாவை சந்திப்பதற்காக, டில்லி செல்கிறோம் என்றார்.
மேலும் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டால் உதவி கிடைக்கும் வரை கருவில் இருக்கும் குழந்தை போன்று கை, கால்களை மடக்கி மூச்சு விட வசதியாக வாயின் அருகே லேசாக காற்றுப்பையை தோண்டி வைக்குமாறு இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஹனுமந்தப்பா விடயத்தில் அவர் புதையுண்ட இடத்தில் இயற்கையாகவே காற்று துவாரம் இருந்துள்ளது.
அதாவது அந்த ஆழத்திலும் சிறு துவாரம் இருந்து அது வழியாக காற்று வந்துள்ளது. அதனால்தான் ஹனுமந்தப்பாவால் 6 நாட்கள் உயிருடன் இருக்க முடிந்தது என தெரிவிக்கப்படுகின்றது. தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹனுமந்தப்பா மருத்துவ மனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM