வாகனத்தைப் பறிக்கச் சென்ற முகவர் அடித்துக் கொலை

Published By: Devika

30 Jan, 2018 | 03:36 PM
image

தவணைத் தொகையை வாங்கச் சென்ற முன்னணி நிதி நிறுவனம் ஒன்றின் முகவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் வென்னப்புவையில் இடம்பெற்றுள்ளது.

பொரெல்லஸ்ஸ பகுதியைச் சேர்ந்த ஒருவர், மோட்டார் சைக்கிள் வாங்க நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்றுள்ளார். ஆரம்பத்தில் தவணைக் கட்டணத்தை ஒழுங்காகச் செலுத்தி வந்த அவர், தொடர்ச்சியாகச் சில மாதங்கள் கொடுப்பனவைச் செலுத்தத் தவறிவிட்டார்.

இது குறித்த விளக்கத்தைக் கொடுக்கவும் அவர் மறுத்ததையடுத்து அவரது மோட்டார் சைக்கிளை மீளப் பெற்றுக்கொள்ள நிதி நிறுவனம் முடிவுசெய்தது.

அதன்படி, நேற்று (29) பகல் குறித்த நபரின் வீட்டுக்குச் சென்ற முகவர், மோட்டார் சைக்கிளை எடுத்து வர முற்பட்டார்.

அப்போது நபரும் மற்றொருவரும் சேர்ந்து முகவரைக் கடுமையாகத் தாக்கினர். இதனால் கடும் காயங்களுக்கு உள்ளான முகவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாக்குதல் நடத்திய இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரத்தில் புதையல்களுடன் ஒருவர் கைது !

2025-01-25 11:24:21
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி ; கடந்த...

2025-01-25 11:20:39
news-image

வாழைச்சேனையில் இரு குழுக்களுக்கிடையில் தகராறு ;...

2025-01-25 11:00:29
news-image

யோஷித்த ராஜபக்ஷ கைது!

2025-01-25 10:21:57
news-image

திருகோணமலை மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா

2025-01-25 10:38:26
news-image

யாழ். பலாலியில் 101 கிலோ கேரள...

2025-01-25 10:00:45
news-image

சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற கைதி மது...

2025-01-25 10:27:23
news-image

மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூட்டு...

2025-01-25 09:50:15
news-image

கல்கிஸ்ஸவில் 29 வயதுடைய போதைப்பொருள் வர்த்தகர்...

2025-01-25 09:44:02
news-image

இலங்கை - அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு...

2025-01-25 09:36:14
news-image

ஜனாதிபதி கீழ் நிலைக்கு செல்வாரென்று எதிர்பார்க்கவில்லை...

2025-01-25 08:43:57
news-image

இன்றைய வானிலை

2025-01-25 06:22:41