கடவுளை வேண்டிக்கொள்வதன் மூலமாகவோ அல்லது தேங்காய் உடைத்து பக்திமயமாக செயற்படுவதன் மூலமாகவோ ஊழல் மோசடிக்காரர்கள் தப்பிக்கவும் முடியாது. ஊழல் மோசடிக்காரர்களை எந்தக் கடவுளும் காப்பாற்றவும் மாட்டார் . அதேபோல் திருடிய தேங்காய்களை உடைத்து ஆலயத்தில் வழிபடுவது கூட ஒரு விதத்தில் ஊழல் தான். அதற்கு கடவுள் இடத்தில தண்டனை உண்டு என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
அரசாங்கம் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
கடந்த காலத்தில் அரசாங்கம் மேற்கொண்ட பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய முரண்பாடுகள் எழுந்தன. அதன் விளைவாக குறித்த காலத்தின் முன்னரே முன்னைய அரசாங்கத்தை விரட்டிவிட்டு புதிய ஆட்சியொன்றை மக்கள் உருவாக்கியுள்ளனர். இந்த நல்லாட்சி அரசாங்கம் தமது கடைமைகளை பொறுப்பேற்றவுடன் ஊழல் மோசடிக்காரர்களை கண்டறிந்து அதற்கமைய சுயாதீனத்தை நிலைநாட்டும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தது. குறிப்பாக இந்த அரசாங்கம் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவை ஆரம்பித்து அதனூடாக குற்றவாளிகளை கண்டறியும் நடவடிக்கைகள் ஆரம்பித்தது.
இந்த நடவடிக்கையில் பல்வேறு தரப்பினரை அழைத்து அவர்களின் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டது மட்டுமல்லாது குற்றவாளிகளாக அடையாளம் காட்டப்பட்ட அல்லது சந்தேகப்படும் நபர்களை கைதுசெய்து அதி தீவிர விசாரணைகளை மேற்கொண்டுமுள்ளது. இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இந்த நிதிக்குற்றப் புலனாய்வு செயற்பாடானது எந்த அரசியல் தலைமையினதும் தலையாட்டி பொம்மை செயற்பாடோ அல்லது பணத்தை வைத்து விளையாடும் விளையாட்டோ அல்லது தனிப்பட்ட வகையில் எவரையும் பழிவாங்கும் நடவடிக்கையோ அல்ல.
இந்த நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வரும் முறைப்பாடுகள் அனைத்துமே பொதுமக்கள் மூலமாகவும் அதேபோல் சிவில் அமைப்புகள் மூலமாகவும் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களேயாகும். ஆகவே, இதில் முழுமையாக பொதுமக்களின் தலையீடுகளே உள்ளன. இதில் கடந்த கால ஊழல் மோசடிகளை கண்டறிந்து அதற்கமைய யார் குற்றவாளிகளோ அவர்களை தண்டிப்பதே முக்கியமானதாகும்.
மேலும் இந்த குற்றச்சாட்டுகளை கண்டறியும் நடவடிக்கைகள் ஆரம்பமானவுடன் மனதளவில் அச்சப்படும் சிலர் ஆலயங்களில் தேங்காய்களை உடைத்து தமது பக்கம் கடவுளை அழைத்து தமது பாதுகாப்பை பலப்படுத்த முயற்சிக்கின்றனர். கடவுளை வேண்டிக்கொள்வதன் மூலமாகவோ அல்லது தேங்காய் உடைத்து பக்திமயமாக செயற்படுவதன் மூலமாகவோ உண்மைகளை மறைக்க முடியாது. அதேபோல் எந்த கடவுளை வேண்டிக் கொண்டாலும் இந்த ஊழல் மோசடிக்காரர்கள் தப்பிக்கவும் முடியாது. ஊழல் மோசடிக்காரர்களை எந்தக் கடவுளும் காப்பாற்றவும் மாட்டார். அதேபோல் ஆலயத்தில் திருடிய தேங்காய்களை உடைத்து வழிபடுவது கூட ஒரு விதத்தில் ஊழல் தான். அதற்கு கடவுள் இடத்தில தண்டனை உண்டு.
மேலும் இன்று தமது இருப்பை தக்கவைக்கும் முயற்சியில் இனவாத கருத்துக்களை பரப்பும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு செயற்பாடாகவே தேசிய கீதத்தில் இனவாத கருத்துக்களை பரப்பி வருகின்றனர். தேசிய கீதம் தமிழில் இசைப்பது ஒன்றும் இனவாத செயற்பாடு அல்ல. தமக்கு தெரிந்த மொழியில் தேசிய கீதத்தை இசைப்பதன் மூலமாகவே இந்த நாட்டை உண்மையாக நேசிக்க முடியும். அதேபோல் சிங்களத்தில் பாடினாலோ அல்லது தமிழில் பாடுவதனாலோ தேசிய கீதத்தின் அர்த்தம் மாறப்போவதில்லை. தமிழ் மக்கள் தமக்கு இலகுவான வகையில் இசைக்க அனுமதிப்பது அவர்களையும் அவர்களின் செயற்பாடுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாகவே அமையும். எனினும் அரசியல் அனாதைகளாக இன்று இருப்பவர்கள் தமது இருப்பை தக்கவைக்கும் நோக்கத்தில் இனவாதத்தை வெளிப்படுத்துகின்றனர் என்றார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM